NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்
    அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்

    அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 03, 2023
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்திய பணக்காரர்கள் பட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடம் பிடித்திருக்கிறார் எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.

    எடெல்கிவ் மற்றும் ஹூரன் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 2023ம் ஆண்டிற்கான இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் (2022-23) ரூ.5 கோடிக்கும் மேல் நன்கொடை அளித்த 119 இந்தியர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

    கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.2,042 கோடியை நன்கொடையாக அளித்து இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் ஷிவ் நாடார். முன்னதாக 2021-2022 மற்றும் 2020-2021 ஆகிய நிதியாண்டுகளிலும் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் இவரே முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வணிகம்

    இரண்டாவது இடத்தில் அசிம் பிரேம்ஜி: 

    ஷிவ் நாடாரைத் தொடர்ந்து, கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1,774 கோடி நன்கொடை அளித்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி.

    இந்தியாவின் முன்னணி பணக்காரரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ரூ.376 கோடி பங்களிப்புடன் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார்.

    ரூ.285 கோடி பங்களிப்புடன் அதானி வணிகக் குழும தலைவர் கௌதம் அதானி ஐந்தாவது இடத்திலும், ரூ.189 கோடி பங்களிப்புடன் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி எட்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.

    இந்தப் பட்டியலின் இளம் நன்கொடையாளரான ஸெரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் காமத் கடந்த நிதியாண்டில் ரூ.110 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

    இந்தியா

    அதிகரிக்கும் நன்கொடை அளவு: 

    இந்தப் பட்டியலில் ரூ.170 கோடி நன்கொடை அளித்து, கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த பெண் என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் நந்தன் நிலேகனியின் மனைவி ரோகினி நிலேகனி.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் நன்கொடை அளவு 59%-மும், மூன்றாண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்டதை விட 200%-மும் உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 14 நபர்கள் ரூ.100 கோடிக்கும் மேலும், 24 நபர்கள் ரூ.50 கோடிக்கு மேலும், 47 நபர்கள் ரூ.20 கோடிக்கு மேலும் கடந்த நிதியாண்டில் மட்டும் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.

    இதில் அதிகபட்ச நன்கொடையானது கல்விக்காகவே வழங்கப்பட்டிருக்கிறது. கல்வியைத் தொடர்ந்து, கலை, கலாச்சாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு அதிக நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  குடியரசு தலைவர்
    புதிய கிரீன் கார்டு பரிந்துரைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை அமெரிக்கா
    Sports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள் சென்னை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது? ஐநா சபை

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 4 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 5 தங்கம் வெள்ளி விலை
    பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு! ஏர் இந்தியா
    IoT மற்றும் சைபர் பாதுகாப்பு வணிகங்களைப் பிரிக்கும் பிளாக்பெர்ரி, ஏன்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025