NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
    பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை

    பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2025
    08:31 am

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட "நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கையின் சுற்றுச்சூழல் அமைப்பு" காரணமாக, இந்தியாவை உலகளாவிய முதலீட்டு இடமாக முன்னிலைப்படுத்தினார்.

    முதலீட்டிற்காக "இந்தியாவிற்கு வருவதற்கு இதுவே சரியான நேரம்" என்று அவர் கூறினார்.

    "இந்தியாவிற்கு வருவதற்கு இதுவே சரியான நேரம். அனைவரின் முன்னேற்றமும், இந்தியாவின் முன்னேற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு உதாரணம் விமானப் போக்குவரத்துத் துறையில் காணப்பட்டது, இந்திய நிறுவனங்கள் விமானங்களுக்கு பெரிய ஆர்டர்களை வழங்கியபோது".

    "இப்போது, ​​120 புதிய விமான நிலையங்களைத் திறக்கப் போகிறோம், எதிர்கால சாத்தியக்கூறுகளை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்," என்று பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.

    பொருளாதார வளர்ச்சி

    இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறக்கூடும் என பிரதமர் நம்பிக்கை

    "கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கையின் சுற்றுச்சூழல் அமைப்பை நாங்கள் நிறுவியுள்ளோம். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற பாதையைப் பின்பற்றி, இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது," என்று பிரதமர் கூறினார்.

    "உலக அரங்கில், இன்று இந்தியா வேகமாக ஒரு விருப்பமான உலகளாவிய முதலீட்டு இடமாக மாறி வருகிறது. இந்தியாவில் குறைக்கடத்தி மற்றும் குவாண்டம் மிஷனை நாங்கள் தொடங்கியுள்ளோம், மேலும் பாதுகாப்பில் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'மேக் ஃபார் தி வேர்ல்ட்' ஆகியவற்றை ஊக்குவிக்கிறோம்," என்றார்.

    ஹைட்ரஜன் திட்டம்

    100 GW அணு சக்தி உற்பத்தி, ஹைட்ரஜன் திட்டம்

    இந்த கூட்டத்தில், ​​இந்தியாவின் ஹைட்ரஜன் திட்டம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார், மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய நாடு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கூறினார்.

    "நாங்கள் ஹைட்ரஜன் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளோம். 2047 ஆம் ஆண்டுக்குள், 100 ஜிகாவாட் அணுசக்தியை இலக்காகக் கொண்டுள்ளோம். இது தனியார் துறைக்கு திறக்கப்படும். சிவில் அணுசக்தி களத்தை தனியார் துறைகளுக்குத் திறந்து விடுகிறோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

    அதனைத்தொடர்ந்து "வெற்றிகரமான" தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்திற்காக பிரெஞ்சு ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    The India-France CEO Forum plays a key role in strengthening economic ties and fostering innovation. It is gladdening to see business leaders from both nations collaborate and create new opportunities across key sectors. This drives growth, investment and ensures a better future… pic.twitter.com/gSImOqAcEZ

    — Narendra Modi (@narendramodi) February 11, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    பாரிஸ்
    பிரான்ஸ்
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிரதமர் மோடி

    நைஜீரியாவில் இந்திய பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு; வரவேற்பில் கவனம் ஈர்த்த 'நகரத்தின் திறவுகோல்' நரேந்திர மோடி
    பிரிட்டிஷ் ராணிக்கு பிறகு இந்த விருதை பெறும் 2வது வெளிநாட்டு தலைவர் மோடி; நைஜீரியா கௌரவம் நரேந்திர மோடி
    ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்ற பிரதமர் மோடி ஜி20 மாநாடு
    'நிஜ்ஜார் கொலை குறித்து பிரதமர் மோடிக்கு தெரியும்': கனடா ஊடகத்தில் வெளியான செய்திக்கு இந்திய கடும் கண்டனம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

    பாரிஸ்

    மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள் பிரான்ஸ்
    இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்  பிரான்ஸ்
    பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு  உலகம்
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்

    பிரான்ஸ்

    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    பிரான்ஸ் அதிபரின் போர்நிறுத்த அழைப்பை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்  இஸ்ரேல்
    பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்  ஜெர்மனி
    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி இந்தியா

    நரேந்திர மோடி

    BRICS மாநாடு: புடினை சந்தித்த மோடி, உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண உதவுவதாக உத்திரவாதம் பிரதமர் மோடி
    'எல்லையில் அமைதியே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்': பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன? பிரதமர் மோடி
    பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி ஒமர் அப்துல்லா
    டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மான் கி பாத் உரையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல் சைபர் கிரைம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025