NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
    நிதி வேண்டி உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்

    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    10:35 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.

    சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு சற்று முன்னதாக இந்த வேண்டுகோளை அந்நாடு விடுத்துள்ளது.

    இந்த கூட்டத்தில் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) அடுத்த $1.3 பில்லியன் தவணையைப் பெற முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.

    பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "போர் அதிகரித்து வருவதால், பங்குச் சந்தைகள் சரிந்துள்ள நிலையில், சர்வதேச கூட்டாளிகள் பதற்றத்தைத் தணிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளது.

    நிதி

    நிதியை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துவதாக இந்தியா குற்றச்சாட்டு

    செப்டம்பர் 2024 முதல், EFF இன் கீழ் பாகிஸ்தான் $7 பில்லியன் பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், வரவிருக்கும் தவணை சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டால், பாகிஸ்தானால் பொருளாதார நெருக்கடி சிறிதுகாலம் தவிர்க்க முடியும் எனத் தெரிகிறது.

    இருப்பினும், கடந்த கால நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராயுமாறு இந்தியா சர்வதேச நாணய நிதியத்தை வலியுறுத்தி உள்ளது.

    இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் சர்வதேச உதவியை பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பதிலாக உளவுத்துறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திருப்பிவிட்டதாகக் கூறினார்.

    சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா கடுமையான அழுத்தம் கொடுக்கும் என்பதால், நிதி கிடைக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

    ஹேக்கிங்

    கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம்

    பாகிஸ்தான் உலக நாடுகளிடம் மன்றாடுவதுபோல் அதன் பொருளாதார விவகார அமைச்சகத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அதன் தற்போது அந்நாடு மறுத்துள்ளது.

    இந்த பதிவை தாங்கள் வெளியிடவில்லை என்றும், தங்களுடைய எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

    அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அடுத்த தவணை நிதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பொருளாதாரம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு
    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு

    பாகிஸ்தான்

    'ஆபரேஷன் சிந்தூர்': பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல் இந்திய ராணுவம்
    ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, விமான சேவைகள் பாதிப்பு விமான நிலையம்
    பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு பிரதமர் மோடி
    Op Sindhoor: இந்திய ராணுவம் தாக்கிய 9 பயங்கரவாத இலக்குகள் எவை? எப்படி? இந்திய ராணுவம்

    பொருளாதாரம்

    இந்தியாவின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.5 சதவீதம் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல் ஜிஎஸ்டி
    2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவால் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் இழப்பு காலநிலை மாற்றம்
    இயர் எண்டர்: 2024இல் திவால்நிலையை அறிவித்த பிரபலமான டாப் 10 நிறுவனங்கள் வணிகம்
    பெருநிறுவனங்களின் லாபங்கள் 4 மடங்கு அதிகரித்தும் ஊழியர்களின் ஊதியம் அதற்கேற்ப உயரவில்லை; ஆய்வில் வெளியான தகவல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025