
இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு சற்று முன்னதாக இந்த வேண்டுகோளை அந்நாடு விடுத்துள்ளது.
இந்த கூட்டத்தில் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) அடுத்த $1.3 பில்லியன் தவணையைப் பெற முடியும் என பாகிஸ்தான் நம்புகிறது.
பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "போர் அதிகரித்து வருவதால், பங்குச் சந்தைகள் சரிந்துள்ள நிலையில், சர்வதேச கூட்டாளிகள் பதற்றத்தைத் தணிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளது.
நிதி
நிதியை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துவதாக இந்தியா குற்றச்சாட்டு
செப்டம்பர் 2024 முதல், EFF இன் கீழ் பாகிஸ்தான் $7 பில்லியன் பெற்றுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், வரவிருக்கும் தவணை சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டால், பாகிஸ்தானால் பொருளாதார நெருக்கடி சிறிதுகாலம் தவிர்க்க முடியும் எனத் தெரிகிறது.
இருப்பினும், கடந்த கால நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராயுமாறு இந்தியா சர்வதேச நாணய நிதியத்தை வலியுறுத்தி உள்ளது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் சர்வதேச உதவியை பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பதிலாக உளவுத்துறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திருப்பிவிட்டதாகக் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா கடுமையான அழுத்தம் கொடுக்கும் என்பதால், நிதி கிடைக்குமா என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ஹேக்கிங்
கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம்
பாகிஸ்தான் உலக நாடுகளிடம் மன்றாடுவதுபோல் அதன் பொருளாதார விவகார அமைச்சகத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அதன் தற்போது அந்நாடு மறுத்துள்ளது.
இந்த பதிவை தாங்கள் வெளியிடவில்லை என்றும், தங்களுடைய எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அடுத்த தவணை நிதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது.