NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ்; பாராட்டுகளை பெறும் கோவை AI ஸ்டார்ட் அப்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ்; பாராட்டுகளை பெறும் கோவை AI ஸ்டார்ட் அப்
    இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது

    ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ்; பாராட்டுகளை பெறும் கோவை AI ஸ்டார்ட் அப்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2025
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Kovai.co என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு 14.5 கோடி ரூபாய் போனஸ் வழங்கியுள்ளது.

    இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் துவக்கினார்.

    தற்போது இந்த நிறுவனத்தில் 140 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.

    கோவை.கோ என்ற நிறுவனம் கோயம்புத்தூர் நகரத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

    இந்த ஸ்டார்ட் அப் வணிகத்திலிருந்து வணிகத்திற்கான மென்பொருள் தீர்வுகளை (SaaS) வழங்குகிறது.

    இந்த நிறுவனம் பிபிசி, போயிங் மற்றும் ஷெல் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அதன் சேவைகளை வழங்கி வருகிறது.

    நிறுவனம் பற்றி

    வெளி முதலீடுகள் இன்றி துவக்கப்பட்ட ஸ்டார்ட்அப்

    Kovai.co என்பது வெளிப்புற முதலீடுகள் எதுவும் இல்லாத, முழுமையாக சுயநிதியில் இயங்கும் ஒரு தொடக்க நிறுவனமாகும்.

    இது மூன்று முக்கிய தயாரிப்புகளை வழங்குகிறது - Turbo 360, Document 360 மற்றும் Biztalk 360. Turbo 360 கிளவுட் செலவுகளை 30% வரை குறைக்க உதவுகிறது.

    Document 360 நிறுவனங்கள் உதவி பக்கங்களை உருவாக்கவும் புதுப்பிக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் Biztalk 360 SAP, Salesforce போன்ற பின்தள பயன்பாடுகளை ஒரே தளத்தில் இணைக்கிறது.

    இன்று, Kovai.co இன் ஆண்டு வருவாய் $15 மில்லியன் மற்றும் அதன் மொத்த மதிப்பு $100 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    போனஸ்

    எதற்காக இந்த போனஸ்?

    "Together we grow" என்ற கொள்கையின் கீழ், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன் நிறுவனத்தில் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் மூன்று ஆண்டுகள் சேவை முடிந்த பின்னர், அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்தின் 50 சதவீதம் போனஸாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இப்போது அந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

    இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரவணக்குமார் கூறியதாவது: "மக்கள் ஏன் ஸ்டார்ட்அப்களில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் பணக்காரர்களாக வேண்டும் என்று நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலான ஸ்டார்ட்அப்களில், ஊழியர்களுக்கு பங்குகள் கிடைக்கின்றன, அவை காகிதத்தில் மட்டுமே உள்ளன. நான் எனது பணியாளர்களுக்கு ஒரு உறுதியான விஷயத்தை கூற விரும்பினேன். அதுதான் தற்போது நடந்திருக்கிறது. பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக என்னுடைய புக்காட்டி காரை விற்பனை செய்துவிட்டேன்!''

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டார்ட்அப்
    ஸ்டார்ட்அப்
    கோவை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ஸ்டார்ட்அப்

    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? இந்தியா
    இந்தியாவில் குறையும் ஸ்டார்ட்அப் முதலீடுகள்.. ஏன்? ஸ்டார்ட்அப்
    தானியங்கி காரை அறிமுகப்படுத்திய பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம்! பெங்களூர்
    மரபணு மூலம் திறமையைக் கண்டறிதல்.. இந்திய-அமெரிக்க தொழிலதிபரின் புதிய ஐடியா! தொழில்நுட்பம்

    ஸ்டார்ட்அப்

    புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    'ஆப்ஸ்கள் மற்றும் கேம்ஸ்களில் இனி NFTக்கு அனுமதி': கூகுள் பிளே கூகுள்
    தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo வணிகம்

    கோவை

    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 27 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    கோவை, நீலகிரிக்கு ரெட் அலெர்ட்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025