NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
    நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்

    ஆகஸ்ட் 1 முதல் நிதித்துறை விதிகளில் புதிய மாற்றங்கள்: நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 02, 2024
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    2024 ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர், ஆயுள் காப்பீடு அல்லாத பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டார்களைப் பாதிக்கும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிதித்துறையில் அமலுக்கு வருகிறது.

    இதில் முதலாவது வருமான வரிக் கணக்கை சரிபார்ப்பதாகும். கடந்த ஜூலையில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவர்கள், ஆன்லைனில் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் வருமானத்தை சரிபார்க்க வேண்டும்.

    இந்த சரிபார்ப்பை மேற்கொண்ட பின்னரே, வருமான வரித்துறை பரிசீலிக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தச் செயல்முறையை முடிக்கத் தவறினால், ₹5,000 (வருமானம் ₹5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் ₹1,000) அபராதம் செலுத்த நேரிடும்.

    காப்பீட்டுத் துறை

    பாலிசிதாரர்களுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கும் நடைமுறை

    இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகஸ்ட் 2024 முதல், ஆயுள் காப்பீடு அல்லாத இதர பாலிசிதாரர்கள் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து விரைவான ஒப்புதலை பெறலாம் என அறிவித்துள்ளது.

    இந்த புதிய உத்தரவின்படி, மருத்துவமனைகள் மூலம் விண்ணப்பங்களைப் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள், அவற்றிற்கு ரொக்கமில்லா அங்கீகாரம் வழங்குவது குறித்த தங்கள் முடிவை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.

    இந்த நடவடிக்கை, பாலிசிதாரர்களுக்கான செயல்முறையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, 100% பணமில்லா அங்கீகாரத்தை எளிதாக்குவதற்கான இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்.

    முதலீட்டு திட்டம்

    பரஸ்பர நிதிகளுக்கு புதிய சொத்து வகுப்பை அறிமுகம் செய்தது செபி

    இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகத்தை மேற்பார்வையிடும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) பரஸ்பர நிதிகளுக்கான புதிய சொத்து வகுப்பை முன்மொழிந்துள்ளது.

    இந்த முன்மொழிவு முதலீட்டாளர்களுக்கு அதிக ரிஸ்க் மற்றும் பெரிய டிக்கெட் பங்குகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட விருப்பத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்படாத மற்றும் அங்கீகரிக்கப்படாத முதலீடுகள் சந்தையில் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

    இந்த முன்மொழிவு மீதான தங்கள் கருத்துக்களை ஆகஸ்ட் 6 வரை செபியிடம் பொதுமக்கள் வழங்கலாம். இவற்றை செபி ஆய்வு செய்து, அதனடிப்படையில் புதிய சொத்து விதியை அமலுக்கு கொண்டு வரும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வருமான வரி விதிகள்
    நிதித்துறை
    காப்பீட்டுத் திட்டங்கள்
    காப்பீட்டுத் திட்டங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    வருமான வரி விதிகள்

    புதிய அல்லது பழைய வருமான வரிமுறை.. எதுவென தேர்ந்தெடுங்கள்!  வருமான வரி அறிவிப்பு
    வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! வருமான வரி சட்டம்
    மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! வருமான வரி சட்டம்
    எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது? இந்தியா

    நிதித்துறை

    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    ஏழை பழங்குடியின இளைஞரின் மருத்துவ கனவு - கடந்து வந்த பாதை  ஒடிசா
    நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்! இந்தியா
    கடந்த நிதியாண்டில் வைப்பு நிதிக்கான வட்டியை வழங்கத் தொடங்கிய EPFO அமைப்பு.. சரிபார்ப்பது எப்படி? வட்டி விகிதம்

    காப்பீட்டுத் திட்டங்கள்

    தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?  இந்தியா
    வாடகைத் தாய்க்கான காப்பீடும்.. அதில் இருக்கும் சிக்கல்களும்! இந்தியா
    வாகனக் காப்பீட்டை மாற்றுவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! கார்
    நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள் காப்பீட்டுத் திட்டங்கள்

    காப்பீட்டுத் திட்டங்கள்

    காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்களை புதுப்பிக்க எல்ஐசியின் திட்டம் காப்பீட்டுத் திட்டங்கள்
    ஹெல்த் இன்சூரன்ஸ் பணமில்லா உரிமைகோரல்கள் 3 மணி நேரத்தில் தீர்க்கப்படும்: IRDAI காப்பீட்டுத் திட்டங்கள்
    ஓரினச்சேர்க்கைத் துணைவர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளை உறுதி செய்த தென் கொரியா உச்சநீதிமன்றம் தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025