NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?

    எழுதியவர் Sindhuja SM
    Jan 16, 2024
    09:03 am

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சமீப காலமாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

    ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு, ஷியா முஸ்லீமின் துணைப் பிரிவான ஜைதிகள் பிரிவை சேர்ந்த ஆயுதமேந்திய குழுவாகும்.

    ஹூதிகள் இயக்கத்தை நிறுவிய ஹுசைன் அல்-ஹூதி என்பவரை நினைவு கூறும் வகையில் அந்த குழு ஹூதி கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகிறது.

    அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா(கடவுளின் கட்சிக்காரர்கள்) என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990களில் ஏமனில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல்-இராணுவ அமைப்பாகும்.

    ஈரானின் ஆதரவுடன் இந்த குழு இயங்கி வருகிறது.

    ட்ஜ்வ்க்

    சர்வதேச கடல் வழிகளில் அதிகரித்து வரும் ஹூதி போராளிகளின் தொந்தரவு 

    1990களில் அப்போதைய ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஊழல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

    சன்னி இஸ்லாமியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹூதிகளின் தற்போதைய முக்கிய குறிக்கோளாகும்.

    இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதனால் இந்திய கடற்படை அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.

    சவ்ஜஸ்ல

    ஹூதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர்

    மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.

    ஏமன் அரசை வீழ்த்திய பின்னர், 2014 முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் போராடி வருகின்றனர்.

    2022 வரை இந்த போரினால் 377,000 பேர் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர்.

    சவுதி அரேபியா இராணுவத்தின் ஆதரவுடன், அதிபர் சலே 2003இல் அந்த கிளர்ச்சிக் குழுவை அகற்ற முயன்றார், ஆனால் ஹூதிகள் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.

    ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளை போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான குழுவாக ஹூதிகள் இயங்கி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏமன்
    ஈரான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்

    ஏமன்

    செங்கடலில், இந்தியாவிற்கு வரவிருந்த சரக்கு கப்பல் ஹூதிகளால் கடத்தல்; யார் அவர்கள்?  கடத்தல்
    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் இஸ்ரேல்
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி கொலை

    ஈரான்

    ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு உலகம்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    ஹிஜாப் அணியாமல் விளையாடிய ஈரான் செஸ் வீராங்கனைக்கு குடியுரிமை வழங்கியது ஸ்பெயின் உலகம்
    ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு நோபல் பரிசு

    உலகம்

    300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது  பிரான்ஸ்
    அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்  அமெரிக்கா
    2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு ஏமன்
    பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி பிரான்ஸ்

    உலக செய்திகள்

    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்
    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்
    ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா  கனடா
    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  ஈரான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025