NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
    காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்

    காங்கோவில் 60 பேர் இறப்புக் காரணமான அழுகை நோய்; வேகமாக பரவுவதால் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 28, 2025
    07:47 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு மர்ம நோய் குறைந்தது 60 இறப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 19 நிலவரப்படி, நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் மொத்தம் 955 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. வௌவால் சடலத்தை சாப்பிட்ட பிறகு இறந்த மூன்று குழந்தைகளிடமிருந்து இந்த பாதிப்பு பரவியதாக நம்பப்படுகிறது.

    காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், வயிற்று வலி மற்றும் கழுத்து விறைப்பு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

    அழுகையும் இந்த நோயின் ஒரு அறிகுறியாக உள்ளது. சில நோயாளிகள் தங்கள் வாந்தி மற்றும் மலத்தில் இரத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

    கவலையளிக்கும் விதமாக, நோய் வேகமாக அதிகரிக்கிறது. அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் இறப்புகள் ஏற்படுகின்றன.

    குழந்தைகள்

    ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு

    ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது மொத்தமாக பதிவான நோய் பாதிப்புகளில் 18% மற்றும் இறப்புகளில் 15.5% ஆகும்.

    ஆரம்பகால சந்தேகங்கள் இந்த நோயை எபோலா அல்லது மார்பர்க் வைரஸுடன் தொடர்புபடுத்தி கூறப்பட்டாலும், சோதனைகள் இந்த சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளன.

    மலேரியா, டைபாய்டு மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற பிற சாத்தியமான காரணங்கள் இன்னும் ஆராயப்படுகின்றன.

    உலக சுகாதார நிறுவனமும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் தொற்றுநோயின் மூலத்தைக் கண்டறிய சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளின் தொலைதூர இடங்கள் மற்றும் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு இல்லாததால் முயற்சிகள் தடைபடுகின்றன.

    தனிமைப்படுத்தல்

    தனிமைப்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு

    பல கிராமங்களில் தனிமைப்படுத்தும் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார ஊழியர்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    விரைவான பரவல் மற்றும் அதிக இறப்பு விகிதம் குறித்து அதிகாரிகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    மேலும், தொடர் சோதனை மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கான அவசரத் தேவையை வலியுறுத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொற்று நோய்
    நோய்கள்
    ஆப்பிரிக்கா
    உலக சுகாதார நிறுவனம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தொற்று நோய்

    இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு; 20 பேர் உயிரிழந்தனர் கொரோனா
    ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது; அப்படியென்றால் என்ன? வைரஸ்
    உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை' உலக சுகாதார நிறுவனம்
    ஃப்ளாப்பி டிஸ்க்கிற்கு குட்பை சொன்ன ஜப்பான் ஜப்பான்

    நோய்கள்

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் தமிழ் நடிகை
    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு! உலகம்
    ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள் உடல் ஆரோக்கியம்
    விட்டிலிகோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை மம்தா மோகன்தாஸ் சமந்தா ரூத் பிரபு

    ஆப்பிரிக்கா

    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியா
    மத்திய பிரதேசம்: இந்தியாவுக்கு வரும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா
    தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வந்த 12 சிறுத்தைகள் இந்தியா
    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் மத்திய பிரதேசம்

    உலக சுகாதார நிறுவனம்

    உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை உலகம்
    வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலக செய்திகள்
    புதிய கொரோனா மாறுபாடு 'ஆர்க்டரஸ்': நோய்தொற்றின் அறிகுறிகள் பற்றிய தகவல்  இந்தியா
    சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025