NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு
    ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் சிதைக்கப்படும் சம்பவங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக பிரதமர் மோடி கூறினார்.

    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு

    எழுதியவர் Sindhuja SM
    May 24, 2023
    10:47 am

    செய்தி முன்னோட்டம்

    எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் சிதைக்கப்படும் சம்பவங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக பிரதமர் மோடி கூறினார்.

    "பிரதமர் ஆண்டனி அல்பானீஸும் நானும் ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பிரிவினைவாத சக்திகளின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்." என்று பிரதமர் மோடி கூறினார்.

    மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    details

    பலமுறை ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது

    "இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான நட்பு மற்றும் உறவுகளை சேதப்படுத்த நினைக்கும் எந்த கூறுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற கூறுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பிரதமர் அல்பானீஸ் இன்று மீண்டும் எனக்கு உறுதியளித்தார்," என்று பிரதமர் மோடி கூறினார்.

    கடந்த மார்ச் மாதம், பிரிஸ்பேனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது.

    அதற்கு முன்னதாகவும் பலமுறை ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி 16ஆம் தேதி, ஆஸ்திரேலியாவின் கேரம் டவுன்ஸில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில் இந்து விரோத கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆஸ்திரேலியா
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது? வருமான வரி விதிகள்
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI ரிசர்வ் வங்கி

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் வந்தே பாரத்
    சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை மெரினா கடற்கரை
    சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை இந்தியா
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா

    நரேந்திர மோடி

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் மோடி
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!  எலான் மஸ்க்
    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025