LOADING...
வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு
ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு எதிரொலி: ஆப்கானியர்களுக்கான குடிவரவு விண்ணப்பங்கள் காலவரையின்றி நிறுத்தி வைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
09:34 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) நிர்வாகம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய காவல்படை வீரர்களைச் சுட்டுக் காயப்படுத்தியவர் ரஹ்மனுல்லாஹ் லகன்வால் என்ற 29 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சுடப்பட்டு, தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். ரஹ்மனுல்லாஹ் லகன்வால், பைடன் நிர்வாகத்தின் கீழ் 2021, செப்டம்பர் 8 அன்று 'ஆபரேஷன் அலைஸ் வெல்கம்' திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

USCIS

USCIS-இன் அதிரடி அறிவிப்பு

இந்த அடையாளம் வெளியானதை தொடர்ந்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது: "உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டவர் தொடர்பான அனைத்து குடிவரவு விண்ணப்பங்களின் செயலாக்கமும் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நெறிமுறைகள் குறித்து மேலும் ஆய்வு செய்யப்படும் வரை காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு மட்டுமே தங்களின் தனிப்பட்ட கவனம் என்று USCIS தெரிவித்துள்ளது.

கண்டனம்

அதிபரின் கண்டனம்

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தச் சம்பவத்தை ஒரு "பயங்கரமான, பதுங்கியிருந்து தாக்கும் பாணியிலான தாக்குதல்," மற்றும் "தீமை மற்றும் வெறுப்பின் செயல்" என்று வர்ணித்தார். மேலும் ஆப்கானிஸ்தானை "பூமியின் நரகக் குழி" என்றும் அவர் விமர்சித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post