NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
    பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை பெறும் 3வது பெண் என்ற பெருமை கிளாடியா கோல்டினுக்கு கிடைத்துள்ளது.

    பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 09, 2023
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார அறிஞரான கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    "பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக" அவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்த நோபல் பரிசு வழங்க தொடங்கியதில் இருந்து(1969), 3 பெண்களுக்கு மட்டுமே பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    2009ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்ற எலினோர் ஆஸ்ட்ரோம் மற்றும் 2019ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்ற எஸ்தர் டுஃப்லோ ஆகிய இருவர் மட்டுமே இந்த பரிசை பெற்ற பெண்கள் ஆவர்.

    எனவே, பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை பெறும் 3வது பெண் என்ற பெருமை கிளாடியா கோல்டினுக்கு கிடைத்துள்ளது.

    டக்ஜ்வ்க்

    2023ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பெற்றவர்கள் 

    கடந்த வாரம், 5 துறைகளுக்கான நோபல் பரிசுகள்-2023 அறிவிக்கப்பட்டன.

    கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு நோபல் மருத்துவப் பரிசு வழங்கப்பட்டது.

    பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த, மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டின் எழுத்தாளர் ஜான் ஃபோர்ஸுக்கு வழங்கப்பட்டது.

    பெண்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்வீடன்
    நோபல் பரிசு
    அமெரிக்கா
    பொருளாதாரம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஸ்வீடன்

    அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு நோபல் பரிசு
    குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு  நோபல் பரிசு
    நார்வே நாட்டினை சேர்ந்த ஜான் ஃபோர்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு  நோபல் பரிசு

    நோபல் பரிசு

    நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார் தென்னாப்பிரிக்கா
    நோபல் பரிசு 2023 : வெற்றியாளர்களை அறிவிக்கும் அட்டவணை வெளியீடு உலகம்
    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு  அமெரிக்கா
    ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஈரான்

    அமெரிக்கா

    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா
    இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்கா இந்தியா
    அமெரிக்கா திரும்பினார் வடகொரியாவால் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் இந்தியா
    அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி  இந்தியா

    பொருளாதாரம்

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி இந்தியா
    "மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர் ரிசர்வ் வங்கி
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025