NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை 
    'ஐந்து கண்கள்' நெட்வொர்க் என்பது 5 நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டணியாகும்.

    காலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 24, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க கனடாவுக்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்ற முடிவுக்கு கனடா வருவதற்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை தான் காரணாமாக இருந்தது என்று கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் கூறியுள்ளார்.

    கனடா செய்தி நிறுவனமான CTV செய்தி சேனலுக்கு பேட்டியளித்திருந்த கனடாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் கோஹன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    "இந்த கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இது குறித்து நிறைய தொடர்புகள் இருந்தன. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது" என்று அமெரிக்க தூதர் மேலும் கூறியுள்ளார்.

    சஜ்ஜில்

    இந்தியா கனடாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்

    'ஐந்து கண்கள்' நெட்வொர்க் என்பது அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டணியாகும்.

    கடந்த ஜூன் மாதம் உயிரிழந்த காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த திங்கள்கிழமை கனடா குற்றம் சாட்டியது.

    ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா கனடாவுக்கு ஒத்துழைத்து பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    இந்தியா
    உலகம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கனடா

    அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்  அமெரிக்கா
    கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை இந்தியா
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் காலிறுதிக்கு தகுதி பேட்மிண்டன் செய்திகள்

    இந்தியா

    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்  நாடாளுமன்றம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் காணும் 4 இந்திய தாய்மார்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    சந்திரயான்-3 திட்டத்தில் பங்காற்றி, தற்போது பகுதி நேரமாக இட்லி விற்கும் ஊழியர், ஏன்? சந்திரயான் 3

    உலகம்

    ஜோ பைடனின் இந்திய பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவிக்கு திடீர் கொரோனா பாதிப்பு  அமெரிக்கா
    போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ரஷ்யா
    செப்டம்பர் 3ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்தது அமெரிக்காவின் லூயிஸ்வில்லே அமெரிக்கா
    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  பாரத்

    அமெரிக்கா

    அமெரிக்காவின் லீக்ஸ் கோப்பையை வென்ற லியோனால் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி கால்பந்து
    இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளும் மீண்டும் விவாதிக்க வாய்ப்பு  இந்தியா
    "மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப் டொனால்ட் டிரம்ப்
    2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025