NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்:  ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன
    இந்தியாவிலிருந்து ஆறாவது விமானம் நேற்று(பிப் 9) துருக்கியை சென்றடைந்தது.

    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    திங்கட்கிழமை(பிப் 6) ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் சிரியா மற்றும் துருக்கியில் 21,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேரும் உயிரிழந்துள்ளனர். எனவே, உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 21,051ஆகக் அதிகரித்துள்ளது.

    இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் காப்பாற்ற நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஏழு நகரங்களில் பொது மருத்துவமனைகள் உட்பட கிட்டத்தட்ட 3,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக துருக்கி அரசாங்கம் கூறியுள்ளது.

    ஹடேயில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய 2 வயது சிறுவனை 79 மணி நேரத்திற்குப் பிறகு மீட்டது, சோர்வடைந்த மீட்பு குழுவினரிடையே உற்சாகத்தை எழுப்பி உள்ளது.

    நிலநடுக்கத்திற்குப் பிறகு துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ, இந்தியா "ஆபரேஷன் தோஸ்த்" என்பதை தொடங்கியுள்ளது.

    இந்தியா

    ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன?

    பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கு, 'ஆபரேஷன் தோஸ்த்' என்பதை இந்தியா தொடங்கியுள்ளது.

    "தோஸ்த்"(நண்பன்) என்ற வார்த்தை ஹிந்தி மற்றும் துருக்கிய மொழிகளில் ஒரே மாதிரியான அர்த்தத்தை கொடுப்பதால் இந்த திட்டத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்திருக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    "எங்களிடம் ஒரு துருக்கிய பழமொழி உள்ளது: 'தோஸ்த் காரா குண்டே பெல்லி ஒளூர்' (ஆபத்தில் உதவுகிறவனே உற்ற நண்பன்)" என்று இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிரத் சுனெல் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

    மேலும் அவர், "மிக்க நன்றி, இந்தியா" என்றும் தன் நன்றிகளை தெரிவித்திருந்தார்.

    நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களுடன் இந்தியாவிலிருந்து ஆறாவது விமானம் நேற்று(பிப் 9) துருக்கியை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    உலகம்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா

    உலகம்

    இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம் கனடா
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங் சீனா
    Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்! தொழில்முனைவோர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025