NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்
    1939ஆம் ஆண்டுக்கு பிறகு இவ்வளவு பெரிய நிலநடுக்கம் துருக்கியில் பாதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,035ஐ எட்டியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மேலும், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், கஹ்ரமன்மராஸ் சென்ற போது ஆரம்ப மீட்பு நடவடிக்கைகளில் இருந்த குறைபாடுகளை ஒப்புக்கொண்டார்.

    உறைபனிக்கு இடையில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

    தென்கிழக்கு துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியாவில் திங்கள்கிழமை(பிப் 6) முதல் ஐந்து பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன.

    ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான முதல் நிலநடுக்கத்தால் இடிந்து விழந்த ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது

    துருக்கி

    மிகபெரும் பூகம்ப மண்டலமான துருக்கி

    1939ஆம் ஆண்டு கிழக்கு எர்சின்கான் மாகாணத்தில் 33,000 பேரை கொன்ற நிலநடுக்கத்திற்கு பிறகு இவ்வளவு பெரிய நிலநடுக்கம் துருக்கியில் பாதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

    துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில அதிர்வுகள் ஏற்படுவது புதிதல்ல .

    2020இல் துருக்கி மற்றொரு பெரிய பூகம்பத்தால் தாக்கப்பட்டது. அந்த பூகம்பம் 6.7 ரிக்டர் அளவில் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்தது.

    1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர்.

    திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கியில் 12,873 பேரும், அண்டை நாடான சிரியாவில் குறைந்தது 3,162 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 16,035 ஆக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    துருக்கி

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    உலக செய்திகள்

    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் இங்கிலாந்து
    வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சொத்து வாங்க தடை: கனடா அறிவிப்பு உலகம்
    அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் ஹீரோ ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி கவலைக்கிடம் பொழுதுபோக்கு
    உலகம் முழுவதும் சீனாவுக்கு கட்டுப்பாடுகள்: கொந்தளிக்கும் சீனா! சீனா

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் சிரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025