NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டம் அறிவிப்பு

    அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் விஆர்எஸ் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 29, 2025
    01:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள ஊழியர்களின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், அலுவலகப் பணிக்குத் திரும்ப விரும்பாத ஃபெடரல் அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    செவ்வாயன்று (ஜனவரி 28) மில்லியன் கணக்கான ஃபெடரல் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், ஊழியர்களுக்கு விஆர்எஸ் ராஜினாமா திட்டத்தை ஏற்க பிப்ரவரி 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக சிபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 10% ஃபெடரல் பணியாளர்கள் அதாவது சுமார் 200,000 ஊழியர்கள் இந்த விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்று டிரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

    இது அரசாங்கத்திற்கு $100 பில்லியன் வரை சேமிப்பைக் கொடுக்கும். அதேநேரத்தில் விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு 8 மாத ஊதியம் வழங்கப்படும்.

    விதிவிலக்குகள்

    குறிப்பிட்ட துறைகளுக்கு விதிவிலக்குகள்

    அஞ்சல் ஊழியர்கள், ராணுவ வீரர்கள், குடிவரவு அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், பணியாளர் மேலாண்மை அலுவலகத்தின் மின்னஞ்சலில் விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்யாதவர்களுக்கு எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரித்துள்ளது.

    கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரிந்த ஃபெடரல் ஊழியர்கள் முழுநேர அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற டிரம்பின் கட்டளையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினார், டிரம்ப் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவது அவசியம் என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    டொனால்ட் டிரம்ப்

    அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு 15% கார்ப்பரேட் வரியை குறைக்கப்போவதாக டிரம்ப் அறிவிப்பு அமெரிக்கா
    18,000 இந்தியர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா; காரணம் என்ன? அமெரிக்கா
    டொனால்ட் டிரம்பின் அவதூறு வழக்கில் $15 மில்லியன் இழப்பீடு வழங்க ஏபிசி நியூஸ் ஒப்புதல் அமெரிக்கா
    அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப் அமெரிக்கா

    அமெரிக்கா

    டிரம்பின் கேபிடல் வருகைக்கு முன்னதாக, கூர்மையான ஆயுதங்களுடன் பிடிபட்ட மர்ம நபர் டொனால்ட் டிரம்ப்
    லாஸ் ஏஞ்சல்ஸில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு, உதவிக்கு வந்த கனடா கனடா
    உலக நாடுகளின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் ஜார்ஜ் சோரோஸ்; இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குற்றச்சாட்டு இத்தாலி
    'நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை வீழ்த்தியிருப்பேன்': கமலா ஹாரிஸ் தோல்வி குறித்து ஜோ பைடன் கருத்து ஜோ பைடன்

    உலகம்

    காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    7 கண்டங்களிலும் உள்ள உயர்ந்த சிகரங்களில் ஏறிய இளம்வயது பெண்; 17 வயது இந்திய சிறுமி சாதனை இந்தியா
    விமான விபத்துக்களின்போது பின்பக்கம் அமருவது அதிக பாதுகாப்பைக் கொடுக்குமா? ஆய்வில் வெளியான தகவல் விமானம்
    தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்த பிறப்பு விகிதம்; வியட்நாமில் வீழ்ச்சியை சந்தித்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி வியட்நாம்

    உலக செய்திகள்

    அதிகரித்து வரும் அச்சுறுத்தல்; பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்த ஜப்பான் முடிவு ஜப்பான்
    பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அறிவிப்பு ஆப்கானிஸ்தான்
    தென் கொரியா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்து விபத்து; 62 பேர் பலி  தென் கொரியா
    பங்களாதேஷ் சுதந்திரத்தை அறிவித்தது ஷேக் முஜிபுர் ரஹ்மான் அல்ல; ஜியாவுர் ரஹ்மான்தான்; பாடப் புத்தகத்தில் திருத்தம் பங்களாதேஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025