NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர்
    கனட மக்களவையின் சபாநாயகர் அந்தோனி ரோட்டா இதற்காக ஞாயிற்றுக்கிழமை யூத சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார்

    'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 25, 2023
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாஜி பிரிவைச் சேர்ந்த ஒரு வீரரைச் சந்தித்துக் கௌரவித்ததற்காக அவருக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில், கனட மக்களவையின் சபாநாயகர் அந்தோனி ரோட்டா இதற்காக ஞாயிற்றுக்கிழமை யூத சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார்.

    கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவேர் ட்ரூடோவின் "தீர்ப்பில் இருந்த பயங்கரமான பிழையை" சுட்டிக்காட்டியதை அடுத்து மன்னிப்பு கோரப்பட்டது.

    இந்த வாரம் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கனடா வந்திருந்த போது, ​​நாஜி குழுவான SSஇன் 14வது வாஃபென் கிரெனேடியர் பிரிவின் மூத்த வீரரை ட்ரூடோ சந்தித்து கௌரவித்தார்.

    இதை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவேர், ட்ரூடோ இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.

    பிக்கவா

    மன்னிப்பு கோரினார் சபாநாயகர் அந்தோணி ரோட்டா

    கனடாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைக் குழுவான பிரண்ட்ஸ் ஆப் சைமன் வைசெந்தல் மையமும்(FSWC) இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    "இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் மற்றும் பிறரைக் கொன்று குவித்த, நாஜி இராணுவப் பிரிவில் பணியாற்றிய உக்ரேனியப் படைவீரருக்குக் கனடாவின் நாடாளுமன்றம் கைத்தட்டல் வழங்கியுள்ளது." என்று FSWC அமைப்பு ட்விட்டரில் விமர்த்திருந்தது.

    இது தவிர, பல முக்கிய அமைப்புகளிடம் இருந்தும் முக்கிய பிரமுகர்களிடம் இருந்தும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மக்களவை சபாநாயகர் அந்தோணி ரோட்டா கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள யூத சமூகத்திடம் மன்னிப்பு கேட்டார்.

    மேலும், அவர் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    உலகம்

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    கனடா

    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து மற்றும் லக்ஷ்யா சென் காலிறுதிக்கு தகுதி பேட்மிண்டன் செய்திகள்
    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  இந்தியா

    உலகம்

    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  பாரத்
    ஆறு வயதில் வீடியோ கேம் உருவாக்க முடியுமா? சாதித்து காட்டிய சிறுமி சிமர் குரானா கின்னஸ் சாதனை
    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! ஜி20 மாநாடு
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு தற்கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025