NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம் 

    இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2024
    10:39 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனையடுத்து, காசாவில் பொங்கி எழும் போரைக் கையாளும் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்யக் கோரி இஸ்ரேலின் இரண்டு நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமின் தெருக்களில் லட்சக்கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கெய்ரோவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் சனிக்கிழமை மாலை எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

    குறைந்தது 134 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    டெல் அவிவ் நகரில், பணயக்கைதிகள் சிலரின் உறவினர்களை உள்ளடக்கிய போராட்டக்காரர்கள், நகரின் ரிங் ரோட்டை மறித்து போராட்டம் நடத்தினர்.

    இஸ்ரேல் 

    பிரதமர் நெதன்யாகு பணயக்கைதிகளை விடுவிக்க தவறிவிட்டதாக குற்றச்சாட்டு

    எதிர்ப்பாளர்கள் ஒழுங்கை மீறி கப்லான் தெருவில் முக்கிய சாலைகளைத் தடுக்க முயன்றனர்.

    இந்நிலையில், சனிக்கிழமை பாதுகாப்புப் பணியாளர்கள் "பொது ஒழுங்கைப் பேண வேலை செய்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.

    மேலும், போராட்டக்காரர்கள் அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், பொது ஒழுங்கை மீறியதாகவும், பொது சொத்துக்களை தீ வைத்து கொளுத்தியதாகவும், சாலைகளை மறித்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, டெல் அவிவில் போராட்டம் முடிவுக்கு வந்ததாக காவல்துறை அறிவித்தது. அதே நேரத்தில் 16 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில், ஜெருசலேமில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே கூடி, பணயக்கைதிகளை விடுவிக்க அவரது தீவிர வலதுசாரி அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இஸ்ரேல்

    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை ஜோ பைடன்
    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்
    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்

    உலகம்

    தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  இந்தியா
    உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான் விமான நிலையம்

    உலக செய்திகள்

    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? அமெரிக்கா
    போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்  இஸ்ரேல்
    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் பங்களாதேஷ்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025