NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்
    இஸ்ரேல் படைகளின் தொடர் தாக்குதலை தொடர்ந்து, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் பாலஸ்தீனியர்கள்.

    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர்

    எழுதியவர் Srinath r
    Nov 09, 2023
    10:07 am

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசா நகரின் இதய பகுதிக்குள் நுழைந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

    அதே சமயம் சுற்றி வளைக்கப்பட்ட காசா பகுதியில், நகரின் முக்கிய அல் ஷிஃபா மருத்துவமனையில் உள்ளவர்கள் கூட ஆயிரக்கணக்கானோர் இன்னும் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பின் உட்கட்டமைப்புகள் மற்றும் சுரங்கங்களை தகர்த்ததாக, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ட்விட்டரில் வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

    அதேபோல் ஹமாஸ் அமைப்பும், கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே இஸ்ரேல் படைகளுக்கு எதிராக சண்டையிடும் காட்சிகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    போர் இடைநிறுத்தத்திற்கு இஸ்ரேல் மறுப்பு

    காசா பகுதிக்கு நிவாரண பொருட்கள் சென்றடையவும், காயமடைந்தவர்களை மீட்கவும், மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலிடம் போரில் இடைநிறுத்தம் செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

    நேற்று, ஜி 7 நாடுகளும் போர் இடைநிறுத்தத்திற்கு வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பணைய கைதிகளை ஹமாஸ் முழுவதுமாக விடுதலை செய்யும் வரை, போரில் இடைநிறுத்தம் செய்வதற்கு சாத்தியம் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போரில், இஸ்ரேல் தரப்பில் 1,400 நபர்களும், பாலஸ்தீன் தரப்பில் 4,300 குழந்தைகள் உட்பட 10,500 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 239 நபர்களை பணைய கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது.

    3rd card

    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

    கடந்த மாதம் சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் சிரியா மற்றும் ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது, ஈரான் ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் காயமடைந்தனர்.

    இரண்டு யு.எஸ். எஃப்-15 போர் விமானங்கள் ஈரானின் புரட்சிகரக் காவலர் படை பயன்படுத்தியதாக அறியப்பட்ட டெய்ர் எல்-ஸூரில் உள்ள மேசுலுன் அருகே உள்ள ஆயுதக் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, இதே போன்ற தாக்குதல்களை ஈரான் ஆதரவு படைகள் மீது, அமெரிக்கா நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்
    காசா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இஸ்ரேல்

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி  ரிஷி சுனக்
    இஸ்ரேல் நாட்டின் தூதரை சந்தித்து பேசினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்  இந்தியா
    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்  ஹமாஸ்
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்

    ஹமாஸ்

    இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள் இஸ்ரேல்
    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது விசா
    ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐநா சபை
    போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    'போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை' - இஸ்ரேல் பிரதமர் உறுதி  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025