NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
    கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை

    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.

    இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இந்த விவகாரம் குறித்து கூறுகையில், பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா மாறியுள்ளது என்றார்.

    மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் மூர்க்கத்தனமானவை என்றும், ஆதாரம் இல்லாதவை என்றும் கூறினார்.

    இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா கூறியபோதும், இதேபோல் பொய்தான் பேசினார் என்று கூறிய அவர், ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

    Srilanka support India in Canada issue

    கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

    ட்ரூடோவின் செயல்பாடுகளால் இந்திய-கனடா உறவு கடுமையாக மோசமடைந்துள்ள நிலையில், பல நாடுகளும் இந்த விவகாரத்தில் கனடாவுக்கு ஆதரவாக பேச மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில், கனடாவின் அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், கனடா விசாரணையைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தங்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், கனடா அரசுடன் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், நிஜ்ஜார் கொலை வழக்கில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானது என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்த அவர், கனடாவின் விசாரணையில் ஒத்துழைக்க, இந்திய அரசாங்கத்தை பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    கனடா
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இலங்கை

    வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் சுற்றுலா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் கடற்படை
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை பாஜக அண்ணாமலை
    சுற்றுலா: இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சில இடங்கள் சுற்றுலா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    கனடா

    சீக்கிய தீவிரவாதியை கொன்றதன் பின்னணியில் இந்தியா? மத்திய அமைச்சர்களுக்கு பகிரங்க மிரட்டல் அமித்ஷா
    டொராண்டோ மாஸ்டர்ஸ் போட்டியிலிருந்து நோவக் ஜோகோவிச் விலகல் நோவக் ஜோகோவிச்
    கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி  விமானம்
    கனடா மக்களுக்கு செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுத்திருக்கும் மெட்டா மெட்டா

    உலகம்

    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! ஜி20 மாநாடு
    செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு தற்கொலை
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி சீனா
    ஒரு கிராமத்தையே மொத்தமாக விழுங்கிய மொராக்கோ நிலநடுக்கம்: கதறும் மக்கள்  மொராக்கோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025