NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்  
    அடுத்த செய்திக் கட்டுரை
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்  
    சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையாவுக்கு(46) சாங்கி சிறை வளாகத்தில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்  

    எழுதியவர் Sindhuja SM
    Apr 26, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக ஒரு கைதியை சிங்கப்பூர் இன்று(ஏப் 26) தூக்கிலிட்டது.

    மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும், அவை புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூருக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

    மேலும், பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் பிரான்சன் மரண தண்டனையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதெல்லாம் புறக்கணிப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

    "சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையாவுக்கு(46) சாங்கி சிறை வளாகத்தில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    details

    சிங்கப்பூர் ஒரு அப்பாவி மனிதனைக் கொல்லப் போகிறது: பிரான்சன்

    1,017.9 கிராம் கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக 2017ஆம் ஆண்டில் சுப்பையாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    1/2 கிலோ கஞ்சா கடத்தினாலேயே சிங்கப்பூரில் மரண தண்டனை வழங்கப்படும் என்ற நிலையில், ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    ஜெனீவாவில் உள்ள மருந்துக் கொள்கைக்கான உலகளாவிய ஆணையத்தின் உறுப்பினர் பிரான்சன், திங்களன்று தனது வலைப்பதிவில், தங்கராஜூ கைது செய்யப்பட்ட நேரத்தில் போதைப்பொருள் அவரிடம் இல்லை என்றும் சிங்கப்பூர் ஒரு அப்பாவி மனிதனைக் கொல்லப் போகிறது என்றும் கூறி இருந்தார்.

    இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிங்கப்பூர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா

    உலகம்

    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா! விண்வெளி
    டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும் உலக செய்திகள்

    உலக செய்திகள்

    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா
    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025