NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை
    இருப்பினும், அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை

    சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 01, 2024
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இருப்பினும், அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    கலிபோர்னியாவில் உள்ள ஒரு பொதுவெளியில், செவ்வாய்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது .

    முன்னதாக, ஜனவரி 1, 2024 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் கோல்டி பிரார் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    ப்ரார் கொல்லப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒரு குடியிருப்புக்கு வெளியே மாலை 5:25 மணியளவில் நடந்தது என கூறப்படுகிறது.அடையாளம் தெரியாத நபர்கள் பிரார் மற்றும் அவரின் கூட்டாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    தொழில்போட்டி காரணமா?

    தொழிற்போட்டி காரணமாக கோல்டி கொலை செய்யப்பட்டதாக தகவல்

    கொலையைத் தொடர்ந்து, சுடப்பட்ட இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    எனினும் ப்ரார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அறிக்கைகளின்படி, போட்டி கும்பல் உறுப்பினர்களான அர்ஷ் டல்லா மற்றும் லக்பீர் ஆகியோர் ப்ரார் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.

    மே 29, 2022 அன்று மான்சாவின் ஜவஹர்கே கிராமத்தில், மூஸ் வாலா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரிவுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

    ஆரம்பத்தில், மூஸ் வாலாவின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.

    இருப்பினும், லாரன்ஸின் கூட்டாளியான விக்கி மிதுகேராவைக் கொன்றதில், மூஸ் வாலாவின் பங்கு இருப்பதாகவும், அவரை நிர்பந்தித்ததாகவும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது பிரார் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம் சர்வதேச நாணய நிதியம்
    அட்லீ- அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் தீபிகா படுகோன்! தீபிகா படுகோன்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்  உலகம்
    அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா அருணாச்சல பிரதேசம்
    மாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா  ரஷ்யா
    காசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்  இஸ்ரேல்

    கொலை

    ஆலுவா சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க உத்தரவு  கேரளா
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது சிறை
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    விருதுநகர்: ரூ.3.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஆண் குழந்தை  விருதுநகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025