Page Loader
Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்
லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல் pc: (x.com/madhuriadnal)

Operation Sindoor: இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே லாகூரில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 08, 2025
09:41 am

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் தொடர்ச்சியாக பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்றும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர் என்றும் ராய்ட்டர்ஸ் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது.

விவரங்கள்

3 ட்ரோன் தாக்குதல் நடந்தாக தகவல்

லாகூர் வால்டன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோபால் நகர் மற்றும் நசீராபாத் பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வருவதையும், புகை மேகங்கள் சூழ்ந்திருப்பதையும் காட்சிகள் காட்டுகின்றன. 3 வெடிச்சத்தங்கள் கேட்டதாக உளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதி லாகூரின் ஆடம்பரமான மத்திய வணிக மாவட்டம் மற்றும் லாகூர் இராணுவப் பாசறையை ஒட்டியுள்ளது. 5-6 அடி நீளமுள்ள ஒரு ட்ரோன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post