NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
    அமெரிக்கா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது

    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளித்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    முன்னதாக ஒரு தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பயங்கரவாதிகள் அவர்களின் சொந்த வீடுகளில் அழிக்கப்பட்டனர்" என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவின் அறிக்கை வந்துள்ளது.

    ராஜ்நாத் சிங் 

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தது என்ன?

    கடந்த வாரம், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "பயங்கரவாதிகளை கொல்ல எல்லை தாண்டவும் இந்தியா தயங்காது" என்று தைரியமாக அறிவித்தார்.

    அதோடு, "மோடியின் வலிமையான ஆட்சியில், பயங்கரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து கொல்லப்படுகின்றனர்.

    இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாதிகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது" என்றும் சிங் வலியுறுத்தினார்.

    பாகிஸ்தானில் குறிவைக்கப்பட்ட கொலைகளை இந்தியா நடத்துவதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டதை அடுத்து இதனை ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    எனினும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் "தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்" என்று மறுத்தார்.

    பாகிஸ்தான்

    இந்தியாவின் கருத்திற்கு பாகிஸ்தான் ரியாக்ஷன்

    இதற்கிடையே, இந்தியாவின் கருத்து ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சொல்லாட்சிகள் எதிர்காலத்தில் உற்பத்தி ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    எனினும் இந்தியாவின் கருத்துகளை பொருட்படுத்தாமல், பிராந்திய அமைதிக்கான தனது அர்ப்பணிப்பை தொடரவுள்ளதாக பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது.

    அதோடு, இந்தியாவுடனான உரையாடலைத் தொடர விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    அதன்படி,"அமெரிக்கா இதற்கு நடுவில் வரப்போவதில்லை. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பதற்றநிலையை தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்." என மில்லர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    அமெரிக்கா
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்  மாலத்தீவு
    மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா  மத்திய அரசு
    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்  பிரதமர் மோடி
    "குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை  அமெரிக்கா

    பாகிஸ்தான்

    'பயங்கரவாதத்தை பயன்படுத்தி இந்தியாவை அடிபணிய வைப்பதே பாகிஸ்தானின் கொள்கை': எஸ் ஜெய்சங்கர் இந்தியா
    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி ஐநா சபை
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  ஈரான்
    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் ஈரான்

    அமெரிக்கா

    தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்  உலகம்
    வரும் திங்கட்கிழமைக்குள் காசா போர்நிறுத்தம் அமலுக்கு வரக்கூடும்: அதிபர் பைடன் உறுதி  இஸ்ரேல்
    கேபிடல் கலகம்: இல்லினாய்ஸ் முதன்மை வாக்குப்பதிவில் இருந்து டிரம்ப் தகுதி நீக்கம் டொனால்ட் டிரம்ப்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  காசா

    பயங்கரவாதம்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார் இஸ்ரேல்
    'காசா நோயாளிகளை வெளியேறும்படி கட்டாயப்படுத்துதல் மரண தண்டனைக்கு சமம்': உலக சுகாதார அமைப்பு இஸ்ரேல்
    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025