NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏவுகணை மூலம் இங்கிலாந்தை தாக்கப் போவதாக ரஷ்யா மிரட்டல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏவுகணை மூலம் இங்கிலாந்தை தாக்கப் போவதாக ரஷ்யா மிரட்டல்
    புதிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்

    உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏவுகணை மூலம் இங்கிலாந்தை தாக்கப் போவதாக ரஷ்யா மிரட்டல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2024
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் பயன்படுத்திய புதிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி நிறுவனமான பிஏ மீடியா தெரிவித்துள்ளது.

    முன்னதாக, டினிப்ரோ நகருக்கு எதிராக "பல ஆயிரம் கிலோமீட்டர்கள்" தூரம் தாக்கும் ஏவுகணையைப் பயன்படுத்தி உக்ரைனில் மோதலை தீவிரப்படுத்தியதற்காக விளாடிமிர் புடினைக் கண்டித்து UK அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

    ரஷ்யாவில் உள்ள இலக்குகளைத் தாக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியவர்களுக்கு எதிராக தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அந்நாட்டுக்கு உரிமை உண்டு என்று ஜனாதிபதி புடின் தனது நாட்டில் தொலைக்காட்சி உரையின் போது கூறினார்.

    இலக்கு வைக்கப்படும் நாடுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு முன்கூட்டியே எச்சரிக்கைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை விடுத்த புடின்

    "நவம்பர் 21 அன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய ஆயுதப் படைகள், உக்ரேனிய பாதுகாப்புத் துறையின் வசதிகளில் ஒன்றின் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை தொடங்கின" என்று டினிப்ரோ மீதான தாக்குதலைப் பற்றி அவர் கூறினார்.

    உக்ரேனின் நட்பு நாடுகளான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ரஷ்யாவில் உள்ள இலக்குகளை நோக்கிச் சுடுவதற்கு முறையே Storm Shadow ஏவுகணைகள் மற்றும் ATACMS ஆயுதங்களை வழங்கியுள்ளன.

    "எங்கள் உறுதியை வலுப்படுத்தவும், ரஷ்யாவின் பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்காப்புக்காக உக்ரைன் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் மட்டுமே இது உதவுகிறது" என்று இங்கிலாந்து பிரதமரின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ரஷ்யா

    24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக வடகொரியாவிற்கு செல்லும் ரஷ்யா அதிபர் புடின் விளாடிமிர் புடின்
    லிமோசைனை ஒட்டிய ரஷ்யா அதிபர் புடினும், வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உம்; வைரலாகும் காணொளி கிம் ஜாங் உன்
    ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி உலகம்
    ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை  இந்தியா

    இங்கிலாந்து

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  லண்டன்
    புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் வெளியிட்ட முதல் அறிக்கை பிரிட்டன்
    மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து முடிவு  பள்ளிகள்
    India vs England 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025