NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?
    பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் என வெளியான தகவலால் பரபரப்பு

    தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 25, 2025
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நாடு முழுவதும், குறிப்பாக டாக்காவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.

    இது தொடர்பான வதந்திகள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன. இருப்பினும் இடைக்காலத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸோ அல்லது ராணுவத் தலைவர் வக்கார் உஸ் ஜமானோ நிலைமை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    யூனுஸுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த முன்னேற்றங்களின் மையத்தில் ஜெனரல் வக்கார் உஸ் ஜமான் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    உயர் ராணுவ உதவியாளர்களுடனான அவரது சமீபத்திய சந்திப்புகளும், அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்த எச்சரிக்கைகளும் அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்த ஊகங்களைத் தூண்டிவிட்டன.

    மறுப்பு

    வதந்திகள் என வங்கதேச அரசு மறுப்பு

    இருப்பினும், பங்களாதேஷ் உள்துறைச் செயலாளர் நசிமுல் ஹக் கனி, அவசரநிலை பிரகடனம் குறித்த பேச்சை வதந்திகள் என்று நிராகரித்தார்.

    இதற்கிடையே, ராணுவத்திற்குள் உள்ள பாகிஸ்தான் சார்பு குழுக்கள் ஜெனரல் வக்கார் உஸ் ஜமானை நீக்குவதற்கு சமீபத்தில் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளன.

    எனினும், அவர் சதியை முறியடித்து ராணுவத்தின் மீது உறுதியான கட்டுப்பாட்டைப் பேணுவதாகத் தெரிகிறது.

    மாணவர் தலைவர் அசாதுஸ்மான் ஃபுவாட், ராணுவ தளபதி ஜனாதிபதி முகமது ஷாபுதீனுடன் இணைந்து புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சதி செய்ததாக குற்றம் சாட்டினார்.

    இது பங்களாதேஷில் அரசியல் புயலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்களாதேஷ்
    ராணுவ அரசு
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் விராட் கோலி
    அமெரிக்காவுக்கு போன் போட்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்; மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்கா அறிவிப்பு அமெரிக்கா
    பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் அரசு அதிகாரி மரணம் ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை பாகிஸ்தான்

    பங்களாதேஷ்

    விரைவில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா; மகன் சஜீப் வசேத் ஜாய் தகவல் ஷேக் ஹசீனா
    பங்களாதேஷின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ராஜினாமா செய்ய முடிவு உச்ச நீதிமன்றம்
    பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள் போராட்டம்
    செயின்ட் மார்டின் தீவை தர மறுத்ததால் அமெரிக்காவின் சதிவேலை; ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றச்சாட்டு ஷேக் ஹசீனா

    ராணுவ அரசு

    நைஜரில் திடீர் ராணுவ புரட்சி; அதிபரை வீட்டுச் சிறையில் வைத்த ராணுவம் ஆப்பிரிக்கா
    தென் கொரியாவை உலுக்கிய 12 மணி நேரம்: ராணுவ ஆட்சி திணிக்கப்பட்டு மீண்டும் ரத்து! தென் கொரியா
    ராணுவ ஆட்சியை அமல்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டார் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் தென் கொரியா
    ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் தென் கொரியா

    உலகம்

    அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம்; ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு டொனால்ட் டிரம்ப்
    டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல் உக்ரைன்
    ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு ஜப்பான்
    இப்படியும் இருப்பாங்களா! அதிக ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு மிருகக்காட்சிசாலையில் பணிக்கு சேர்ந்த இளம் பெண் டிரெண்டிங்

    உலக செய்திகள்

    15ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி ஓவியமாக வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு உலகம்
    ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ் பிரான்ஸ்
    மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: உலகின் சிறந்த டாப் 5 பெண் அரசியல் தலைவர்கள் சர்வதேச மகளிர் தினம்
    உலகளாவிய CO2 உமிழ்வில் 50% 36 நிறுவனங்களிலிருந்து மட்டுமே வருகிறது உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025