NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி 
    இலங்கையிடமிருந்து கட்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி

    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி 

    எழுதியவர் Nivetha P
    Aug 21, 2023
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா-இலங்கை இடையே 285-ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கச்சத்தீவு கடந்த 1974ம்ஆண்டு வரை இந்தியாவின் கைவசம் இருந்துள்ளது.

    அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நல்லெண்ணம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 1974ல்-ஜூலை.,8ம்தேதி இலங்கை கைவசம் கட்சத்தீவினை ஒப்படைத்துள்ளார்.

    தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தில் 1976ல் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டநிலையில், மன்னர் வளைகுடா பகுதியில் இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

    இதிலிருந்து தான் தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு ராணுவத்தினரும்-மீனவர்களும் தொந்தரவு தரத்துவங்கியுள்ளனர்.

    இதனடிப்படையில் தான் கச்சத்தீவினை மீட்கவேண்டும் என்னும் கோரிக்கை எழத்துவங்கியது.

    ஆனால் இதனைத்தாண்டி இத்தீவினை மீட்க வேறுசில காரணங்களை மத்திய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தற்போது எடுத்துரைத்துள்ளார்.

    அவர் கூறியுள்ளதாவது, சிலநாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின்'எய்டு-டேட்டா'என்னும் ஆய்வுக்கூடம் ஓர் ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    ஆய்வறிக்கை 

    கொழும்பு தாமரை கோபுரத்தில் உளவுப்பார்க்கும் சாதனங்களை பொருத்தியுள்ள சீனா 

    மேலும் அவர், இலங்கை ஹம்பந்தோட்டாவிலுள்ள துறைமுகத்தினை தனது கடற்படை தளமாக கைவசப்படுத்துவதற்கான பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

    இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் பட்சத்தில், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று தெரிகிறது.

    அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்பொழுது, இந்நாட்டின் தென்பகுதியில் காலூன்றிய சீனா, தற்போது கிழக்கு மற்றும் வடக்கு மாகணங்களையும் தன்வசப்படுத்த முயற்சித்து வருகிறது.

    அதன்படி, கடந்த 2019ல் திறக்கப்பட்ட கொழும்புவிலுள்ள தாமரைக்கோபுரத்தினை வடிவமைத்த சீனா, அதில் உளவுப்பார்க்கும் சாதனங்களை பொருத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    எனவே, கச்சத்தீவினை மீட்டு அங்கு இந்தியா படைத்தளம் அமைத்தால் மட்டுமே சீனாவால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் இந்தியாவில் ஏற்படுவதை தடுப்பதோடு, அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா
    இந்திரா காந்தி
    சீனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    இந்தியா

    பொது தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி அளித்த 5 பெரிய வாக்குறுதிகள் பிரதமர் மோடி
    உலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி சுதந்திர தினம்
    சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    இந்திரா காந்தி

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2 இந்தியா

    சீனா

    சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியா கவலைப்படத் தேவையில்லை  இந்தியா
    32,808 அடி ஆழத்திற்கு குழி தோண்டும் சீனா: காரணம் என்ன  உலகம்
    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது? அமெரிக்கா
    உளவு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடுகிறது அமெரிக்கா: காரணம் என்ன  ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025