NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    05:46 pm
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
    பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமருடன் உரையாடுவது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

    ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்திய-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், புத்தாக்கம், அறிவியல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான மூலோபாய கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமருடன் உரையாடுவது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். "ஹிரோஷிமா ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது." என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார். இந்த இடுகையை ட்விட்டரில் பகிர்ந்த பிரிட்டிஷ் தூதரகம் "ஒரு வலுவான நட்பு" என்று அதற்கு கேப்ஷன் இட்டிருந்தது.

    2/2

    பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

    "இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து FTA பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து பேசியது மட்டுமல்லாமல் அவர்களின் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் மக்களிடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்." என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தற்போது ஜப்பான் சென்றுள்ளார். மேலும், பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உக்ரைன் அதிபர், அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர், இந்தோனேசிய அதிபர், ஜெர்மன் சான்சிலர் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஜப்பான்
    பிரிட்டன்
    இங்கிலாந்து
    ரிஷி சுனக்

    இந்தியா

    2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை தேவையில்லை: SBI ரிசர்வ் வங்கி
    இந்தியாவில் ஒரே நாளில் 756 கொரோனா பாதிப்பு: 8 பேர் உயிரிழப்பு கொரோனா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது? வருமான வரி விதிகள்

    ஜப்பான்

    உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா  ரஷ்யா
    'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்  இந்தியா
    UPI சேவையில் இணையும் ஜப்பான்? இந்தியா
    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்

    பிரிட்டன்

    தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர்
    'ஆக்டிவிஷன் பிலிசார்டு - மைக்ரோசாஃப்ட்' ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்! மைக்ரோசாப்ட்
    இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்! இந்தியா
    கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை  இந்தியா

    இங்கிலாந்து

    கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்! உலகம்
    இந்துஜா குழுமத்தின் தலைவரான எஸ்பி இந்துஜா, 87 வயதில் லண்டனில் காலமானார் லண்டன்
    அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ் உலகம்
    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன  பிரிட்டன்

    ரிஷி சுனக்

    இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்  இங்கிலாந்து
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!  பங்குச் சந்தை
    AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்! செயற்கை நுண்ணறிவு
    ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் உலகத் தலைவர்கள் தங்க போகும் இடங்கள் ஜி20 மாநாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023