NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
    பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமருடன் உரையாடுவது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

    பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    May 21, 2023
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்திய-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம், புத்தாக்கம், அறிவியல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான மூலோபாய கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமருடன் உரையாடுவது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

    "ஹிரோஷிமா ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது." என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

    இந்த இடுகையை ட்விட்டரில் பகிர்ந்த பிரிட்டிஷ் தூதரகம் "ஒரு வலுவான நட்பு" என்று அதற்கு கேப்ஷன் இட்டிருந்தது.

    details

    பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி

    "இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து FTA பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து பேசியது மட்டுமல்லாமல் அவர்களின் விரிவான மூலோபாய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உயர்கல்வி மற்றும் மக்களிடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்." என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தற்போது ஜப்பான் சென்றுள்ளார்.

    மேலும், பிரதமர் மோடி பல்வேறு உலக தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அதில் உக்ரைன் அதிபர், அமெரிக்க அதிபர், பிரெஞ்சு அதிபர், இந்தோனேசிய அதிபர், ஜெர்மன் சான்சிலர் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜப்பான்
    பிரிட்டன்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    இந்தியா

    உடல் பருமனான காவலர்களுக்கு மூன்று மாத கெடு: அசாம் காவல்துறை அதிரடி  அசாம்
    வைரல் செய்தியாக பரவும் பிரபல யூடியூபர் இர்ஃபானின் திருமணம்  வைரல் செய்தி
    சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா  காங்கிரஸ்
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    இங்கிலாந்து

    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் பாகிஸ்தான்
    இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை இந்தியா
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் கோவா
    முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025