NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு 
    மே 22 முதல் 24 வரை பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    May 23, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

    ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் விருந்தினராக மே 22 முதல் 24 வரை பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மேலும், நாட்டின் ஆற்றல்மிக்க, பன்முகத்தன்மை கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோரைக் கொண்டாடும் சமூக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார்.

    "பிரதமர் மோடி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவார். மேலும், அவர் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து,அங்கிருக்கும் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றுவார். பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரவு விருந்தளிக்க உள்ளார்." என்று பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து விவரித்த வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

    details

    பெரும் நிறுவன தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி 

    "அதிகாரப்பூர்வமாக பிரதமர் மோடிக்கு விருந்தளிப்பதில் பெருமை அடைகிறேன்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    தற்போது, பிரதமர் மோடி பெரும் ஆஸ்திரேலிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.

    ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான போர்ட்ஸ்க்யு பியூச்சர் இண்டஸ்ட்ரீஸின் செயல் தலைவரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

    ஜான் ஆண்ட்ரூ ஹென்றி பாரஸ்ட் என்ற ஆஸ்திரேலிய தொழிலதிபரையும் பிரதமர் சந்தித்தார். ஜான் ஆண்ட்ரூ என்பவர் 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தவர் ஆவார்.

    சிட்னியில் வைத்து ஆஸ்திரேலிய சூப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஷ்ரோடரையும் பிரதமர் சந்தித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆஸ்திரேலியா
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ஏஎப்சி மகளிர் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் குரூப் சி'யில் இடம் பெற்றுள்ள இந்திய கால்பந்து அணி! இந்திய அணி
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்!  அரசு மருத்துவமனை
    நாட்டில் 8 புதிய நகரங்கள் அமைக்க மத்திய அரசு திட்டம்  மத்திய அரசு
    பயங்கரவாத சதி அம்பலம்: 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!  பாகிஸ்தான்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலகம்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    பிரதமர் மோடி

    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி வந்தே பாரத்
    சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு மத்திய அரசு
    பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார் வந்தே பாரத்

    நரேந்திர மோடி

    சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினலைப் பிரதமர் மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார் இந்தியா
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025