Page Loader
'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்
புல்வாமா தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என பாகிஸ்தான் ஒப்புதல் வாக்குமூலம்

'2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம்

எழுதியவர் Sekar Chinnappan
May 11, 2025
02:27 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மே 9) ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் ஏர் வைஸ் மார்ஷல் ஔரங்கசீப் அகமது இந்த ஒப்புதலை அளித்தார். ஒரு மூத்த பாகிஸ்தான் அதிகாரி இந்த கொடிய தாக்குதலில் நாட்டின் பங்கை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான் பல வருடமாக அதிகாரப்பூர்வமாக இதை மறுத்து வந்த நிலையில், இயக்குநர் ஜெனரல் ஐஎஸ்பிஆர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி மற்றும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஆகியோருடன் பேசிய அகமது, புல்வாமா தாக்குதலை தந்திரோபாய புத்திசாலித்தன நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதலுக்கான இந்தியாவின் பதிலடி 

புல்வாமா குண்டுவெடிப்பில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற பாகிஸ்தானின் நீண்டகால நிலைப்பாட்டின் மீது இந்த அறிக்கை கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது. இது ஜெய்ஷ்-இ-முகமது தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானிற்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது தாக்கியது. மேலும், இந்தியா தொடர்ந்து ஜெய்ஷ்-இ-முகமது மீது குற்றம் சாட்டி விரிவான ஆதாரங்களை சமர்ப்பித்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் முன்பு ஆதாரங்களைக் கோரியது மற்றும் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை என தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவத் தளங்களை குறிவைத்து இந்தியா நடத்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வந்தது..

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post