NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்
    அதிகமான இடங்களை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தானின் ரகசிய ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது

    ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2025
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முன்னர் ஒப்புக்கொண்டதை விட அதிகமான இடங்களைத் தாக்கியதாக பாகிஸ்தானின் ரகசிய ஆவணம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தானின் எதிர் தாக்குதல் நடவடிக்கையான பன்யான் அன் மர்சூஸை விவரிக்கும் இந்த ஆவணத்தில், மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் பெஷாவர், ஜாங், ஹைதராபாத் (சிந்து), குஜராத், குஜ்ரான்வாலா, பஹாவல்நகர், அட்டாக் மற்றும் சோர் ஆகிய இடங்களில் இந்திய தாக்குதல்களைக் காட்டும் வரைபடங்கள் அடங்கும் என்று நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.

    மே 7 எதிர் தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதலுக்குப் பிந்தைய விளக்கக் குறிப்புகளில், இந்திய அதிகாரிகளால் இந்தப் பகுதிகள் குறிப்பிடப்படவில்லை.

    எதிர் தாக்குதல் விவரங்கள்

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்தது

    மே 10 அன்று, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கிய சுமார் மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்லாமாபாத் இந்தியாவுடன்போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

    போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, மாக்சர் டெக்னாலஜிஸ் எடுத்த செயற்கைக்கோள் படங்கள் பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானத் தளங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தைக் காட்டின - ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளம், சர்கோதாவில் உள்ள PAF தளம் முஷாஃப், போலாரி விமானத் தளம் மற்றும் ஜகோபாபாத்தில் உள்ள PAF தளம் ஷாபாஸ்.

    மூலோபாய நடவடிக்கை

    கூடுதல் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் மூலோபாய நடவடிக்கையாக இருந்திருக்கலாம்

    முசாபராபாத், கோட்லி, ராவலகோட், சக்ஸ்வரி, பிம்பர், நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் மற்றும் சக்வால் ஆகியவை இலக்கு வைக்கப்பட்ட பிற இடங்கள்.

    இந்த அதிர்ச்சியூட்டும் கூற்றுக்கு இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை, ஆனால் பாகிஸ்தான் இப்போது இந்தக் கூற்றுக்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நேரம் சற்று யோசிக்க வைக்கிறது.

    பாகிஸ்தானின் ஆழத்தில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்களை இந்தியா குறிவைத்தது என்பதை சர்வதேச உலகிற்கு உணர்த்துவதே இதன் இலக்காக இருக்கலாம்.

    இருப்பினும் இலக்கு வைக்கப்பட்ட பகுதிகள் பொதுமக்களா அல்லது இராணுவ வசதிகளா என்பதை ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை.

    இராணுவ நிலைப்பாடு

    ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் தனது இராணுவ நிலைப்பாட்டை மாற்றியுள்ள இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தனது இராணுவ நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.

    இந்திய மண்ணில் எதிர்காலத்தில் நிகழும் பயங்கரவாதச் செயல்கள் போர்ச் செயல்களாகக் கருதப்படும் என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

    சர்வதேச சட்டத்தில், "போர்ச் செயல்" என்பது பொதுவாக ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு எதிராக ஆயுதப் படையைப் பயன்படுத்துவதாக வரையறுக்கப்படுகிறது.

    மேலும், பிரதமர் நரேந்திர மோடி, இனிமேல் பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும், பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ஆபரேஷன் சிந்தூர்
    இந்தியா

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    'லியோ' படத்தின் சம்பளபாக்கி ₹35 லட்சம் தவறாக பயன்படுத்தியதாக தினேஷ் மாஸ்டர் மீது புகார் நடன இயக்குனர்
    தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல் கமல்ஹாசன்
    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர், உயிருக்கு போராடி வருகிறார் ஆஸ்திரேலியா

    பாகிஸ்தான்

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது இந்தியா
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்

    ஆபரேஷன் சிந்தூர்

    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் போர்
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் இந்தியா

    இந்தியா

    நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி கனிமொழி
    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ் பீகார்
    அரபிக்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கேரளாவிற்கு ஹாஸ்மேட் லாரியை அனுப்பியது தேசிய பேரிடர் மீட்புப் படை கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025