LOADING...
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அசிம் முனீர் நிராகரிப்பு
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்

பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அசிம் முனீர் நிராகரிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 17, 2025
01:40 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வரும் ஊகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். பிரஸ்ஸல்ஸுக்கு சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரிடம், ஜாங் ஊடகக் குழுவின் கட்டுரையாளர் சுஹைல் வாராய்ச்சிற்கு பேட்டியளித்தார். அப்போது இதுதொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த அசிம் முனீர், நாட்டின் பாதுகாவலர் என்ற தனது பங்கைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினார். ஜனாதிபதி பதவி அல்லது பிரதமர் பதவியில் மாற்றம் குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை என்று முனீர் கூறியதாக வாராய்ச் மேற்கோள் காட்டினார்.

ஆசை

அசிம் முனீரின் மிகப்பெரிய ஆசை

தொடர்ந்து பேசிய அசிம் முனீர், "கடவுள் என்னை நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். நான் ஒரு சிப்பாய், எனது மிகப்பெரிய ஆசை தியாகம்" என்று கூறினார். ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற தோல்விக்குப் பிறகு, தன்னைத்தானே ஃபீல்ட் மார்ஷலாக அறிவித்துக் கொண்ட அசிம் முனீர், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை நீக்கிவிட்டு அந்த பதவியை கைப்பற்ற திட்டமிட்டதாக தகவல் வெளியாகின. இருப்பினும், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி இந்தக் கூற்றுக்களை நிராகரித்து, அவற்றை ஆதாரமற்றவை என்று கூறினர். எனினும், பாகிஸ்தானுக்கு ராணுவ ஆட்சி ஒன்றும் புதிதல்ல. 1958 இல் அயூப் கான், 1977 இல் ஜியா-உல்-ஹக் மற்றும் 1999 இல் பர்வேஸ் முஷாரஃப் ஆகியவை குறிப்பிடத்தக்க ஆட்சிக் கவிழ்ப்புகளாகும்.