Page Loader
புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு 
ஒவ்வொரு ஆண்டும் 8.7 மில்லியன் மக்கள் இதனால் கொல்லப்படுகிறார்கள்.

புகைபிடிப்பதைத் தடுக்க நான்கு நாடுகள் மட்டுமே முயற்சித்து வருகின்றன: உலக சுகாதார அமைப்பு 

எழுதியவர் Sindhuja SM
Aug 01, 2023
12:28 pm

செய்தி முன்னோட்டம்

பிரேசில், மொரிஷியஸ், நெதர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே புகைபிடிப்பதற்கு எதிரான போராட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக உலக சுகாதார அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், புகையிலை பயன்பாட்டைக் குறைக்க அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக நாடுகளிடம் ஐ.நா. சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. புகையிலை விளம்பரங்களுக்கு தடை விதித்தல், சிகரெட் பாக்கெட்களில் சுகாதார எச்சரிக்கைகளை ஒட்டுதல், புகையிலை வரிகளை உயர்த்துதல் மற்றும் புகையிலை பழக்கத்தில் இருந்து வெளியேற விரும்புவோருக்கு உதவி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

டிஜிலி

புகைபிடித்தல் தடுக்கக்கூடிய மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது

மொரிஷியஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பிரேசில் மற்றும் துருக்கியுடன் இணைந்து தங்கள் அமைப்பு பரிந்துரைத்த அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. 5.6 பில்லியன் மக்கள், அதாவது உலக மக்கள்தொகையில் 71 சதவீதம் பேர், தற்போது குறைந்தபட்சம் ஒரு புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கையால் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இது 2007ஐ விட ஐந்து மடங்கு அதிகமாகும். 2007ல் 22.8 சதவீதமாக இருந்த புகைபிடிப்பவர்களின் உலகளாவிய விகிதம் 2021ல் 17 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சரிவு இல்லாவிட்டால், இப்போது கூடுதலாக 300 மில்லியன் புகைப்பிடிப்பவர்கள் இருந்திருப்பார்கள் என்று WHO தெரிவித்துள்ளது. தற்போது வரை, புகைபிடித்தல் தடுக்கக்கூடிய மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8.7 மில்லியன் மக்கள் இதனால் கொல்லப்படுகிறார்கள்.