NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்
    நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 192 பேர் பலியான சோகம்

    நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 30, 2024
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது.

    மேலும், 30 பேரைக் காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தி, நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியது.

    தொடர் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 192 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பேரழிவில் நாடு முழுவதும் மேலும் 94 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளனர்.

    தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரிஷிராம் திவாரி தெரிவித்துள்ளார்.

    மீட்பு பணிகள்

    வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ள நேபாளம்

    நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை 4,500 பேரிடர் பாதிக்கப்பட்ட நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

    காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உணவு மற்றும் பிற அவசரகால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள பல சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும், தலைநகர் காத்மாண்டுவிற்கு செல்லும் அனைத்து வழிகளும் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன.

    இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர். போக்குவரத்தை மீண்டும் தொடங்க தடையாக உள்ள நெடுஞ்சாலைகளை சரி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக திவாரி கூறினார்.

    வெள்ளம்

    நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட காரணம்

    காத்மாண்டுவின் முக்கிய நதியான பாக்மதி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததைத் தொடர்ந்து அபாய அளவை தாண்டி பாய்கிறது.

    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவை கடுமையான மழைக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருவநிலை மாற்றம் ஆசியா முழுவதும் மழைப்பொழிவின் அளவையும் நேரத்தையும் மாற்றும் அதே வேளையில், வெள்ளத்தின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    நீர் தேக்கம் மற்றும் வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத கட்டுமானம் காரணமாக பொதுவாக வெள்ள பாதிப்புகள் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்
    வெள்ளம்
    கனமழை
    மழை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நேபாளம்

    10 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர் மரணம்!  இந்தியா
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! இந்தியா
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்! கிரிக்கெட்
    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இந்தியா

    வெள்ளம்

    தொடர் கனமழை, வெள்ளம்: தென் தமிழகத்திற்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை; உதவி எண்கள் அறிவிப்பு  தமிழ்நாடு
    4 தென் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  தமிழ்நாடு
    4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு  திருநெல்வேலி
    தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண் அறிவிப்பு  தூத்துக்குடி

    கனமழை

    வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களுக்கு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படுகிறது  தமிழக அரசு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கைகள்  தமிழ்நாடு
    தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  தமிழ்நாடு
    தமிழகத்தில் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு; சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை மழை

    மழை

    மிக்ஜாம் புயலால் சென்னையில் 19 பேர் உயிரிழப்பு; இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத தலைநகரம்  சென்னை
    மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு
    சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன? சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025