LOADING...
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி
பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர்

பதவியிழந்தும் இந்தியா மீதான வெறுப்பை விடாத நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2025
04:18 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தின் முன்னாள் பிரதமரான கே.பி.சர்மா ஒலி, வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பதவி நீக்கத்திற்குப் பிறகு முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராமர் பிறந்த இடம் குறித்த அவரது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடே தனது அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நேபாள ராணுவத்தின் சிவாபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர், தனது கட்சிக்கு எழுதிய கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் நேபாளத்தைச் சேர்ந்தவை என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை ஒலி மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ராமர் அயோத்தியில் அல்ல, நேபாளத்தில்தான் பிறந்தார் என்ற தனது சர்ச்சைக்குரிய கூற்றிலும் அவர் உறுதியாக நின்றார்.

மறுப்பு

சமரசம் செய்ய மறுப்பு

இந்த விவகாரங்களில் தான் சமரசம் செய்ய மறுத்ததாலேயே, அதிகாரத்தை இழந்ததாக அவர் சுட்டிக் காட்டினார். நாடு முழுவதும் இளைஞர்கள் தலைமையிலான ஜென்-ஜி (Gen Z) போராட்டங்கள் நடந்து வந்தபோதும், அவர் தனது அறிக்கையில் அது குறித்து ஆழமாகப் பேசவில்லை. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தூண்டப்பட்ட இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. இதில், குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள், ஒலியின் ராஜினாமாவுக்கு வழிவகுத்ததுடன், நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அங்கு சிக்க வைத்துள்ளது. ஒலியின் இந்த அறிக்கை, தனது அரசியல் வீழ்ச்சியை, பொதுமக்களின் போராட்டங்களுக்குப் பதில், கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் விளைவாகக் காட்ட முயல்வதாகக் கூறப்படுகிறது.