NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு 

    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு 

    எழுதியவர் Srinath r
    Dec 24, 2023
    10:28 am

    செய்தி முன்னோட்டம்

    மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    துபாயில் இருந்து நேற்று அமெரிக்காவின் நிகரகுவாவிற்கு சென்ற விமானத்தில் மனித கடத்தல் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக வெட்ரி விமான நிலையத்தில்(பாரிஸிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்) தரையிறக்கினர்.

    பின்னர், விமானம் சுத்தி வளைக்கப்பட்டு அதிலிருந்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

    பயணிகளை ஏற்றிச் சென்ற ரோமானிய சார்ட்டர் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸ், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என அதன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    அந்த விமானத்தில், 11 துணையில்லாத சிறார்கள் உள்ளிட்ட பல குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    பத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் புகழிடத்திற்கு விண்ணப்பம்

    பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில பயணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரோர் ஓபிர்சல், துணையில்லாத சிறார்களில் 6 பேர் மற்றும் 10 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பிக்க விரும்புவதாக ஏஎஃப்பி இடம் தெரிவித்தார்.

    அமெரிக்க அல்லது கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கு, பயணிகள் மத்திய அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    வெள்ளிக்கிழமை விசாரணைக்காக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் காவல் மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    விமானத்தில் இருந்த பயணிகள், வெட்ரி விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும், அவர்களை சந்திக்க வெளி ஆட்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

    3rd card

    பிரான்ஸ் சட்டம் என்ன சொல்கிறது?

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணை பிரெஞ்சு நீதிமன்றத்தில் விசாரிக்க இன்று பட்டியலிடப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள பயணிகளை மேலும் எட்டு நாட்களுக்கு தடுத்து வைக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    விமானத்தில் மனித கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமானம் சுற்றி வளைக்கப்பட்டது. அது நிரூபிக்கப்படும் பட்சத்தில், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    இந்நிலையில், அனைத்து குழு உறுப்பினர்களும் விசாரணைக்குப் பிறகு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர், பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரான்ஸ்
    இந்தியா
    இந்தியர்கள்
    துபாய்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரான்ஸ்

    சுற்றுலா: பிரான்சிற்கு சுற்றுலா செல்லும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் சுற்றுலா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி உலகம்

    இந்தியா

    கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர்
    கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள்
    புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு மத்திய அரசு
    ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய விதிமுறைகள் வங்கிக் கணக்கு

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து

    துபாய்

    துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்? உலகம்
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் பிரதமர் மோடி
    பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி உலகம்
    துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025