NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது

    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2024
    12:26 pm

    செய்தி முன்னோட்டம்

    காசாவுடனான இஸ்ரேலின் போரைக் கண்டித்து பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நேற்று போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    பல்கலைக்கழக வளாகங்களில் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்ததை அடுத்து, எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் அடக்குமுறையை மேற்கொண்டனர். அதன் பின்னர், பலரை அவர்கள் கைது செய்தனர்.

    கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதுவரை நடந்து வந்த போராட்டங்கள் இப்போது ஹார்வர்ட் மற்றும் யேல் உட்பட குறைந்தது ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு பரவியுள்ளது.

    டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டின் வளாகத்தில் 34 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த பல்கலைக்கழகத்தில் 100 மாநில துருப்புக்கள் காவலுக்கு போடப்பட்டுள்ளன.

    ஹார்வர்டில், பாலஸ்தீனிய ஆதரவு எதிர்ப்பாளர்கள் போராட்ட முகாம்களை அமைப்பதற்காக வளாகத்தை முற்றுகையிட்டனர்.

    அமெரிக்கா 

    இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை

    டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆஸ்டின் வளாகத்தில் இருந்த போராட்டக்காரர்கள், காசாவுடனான போரில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் உற்பத்தியாளர்கள் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்து விலக வேண்டும் என்று கோரினர்.

    இந்த போராட்டம் ஆரம்பத்தில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் தொடங்கியது. அதன் பின், மதிய உணவு நேரத்தில், சுமார் 200 மாணவர்கள் கூடியிருந்தனர்.

    அந்த பல்கலைக்கழகத்தின் பாலஸ்தீனிய ஒற்றுமைக் குழுவால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தி டெக்சாஸ் ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.

    கிட்டத்தட்ட 100 மாநில துருப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நிறுத்த அந்த பல்கலைக்கழகத்திற்கு வந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    உலகம்

    சமீபத்திய

    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை
    இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் வங்கிக் கணக்கு

    அமெரிக்கா

    எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி மீண்டும் உலகின் No.1 பணக்காரர் ஆனார் ஜெஃப் பெசோஸ்  எலான் மஸ்க்
    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி உலகம்
    அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன்  ஜோ பைடன்
    'அணு ஆயுதப் போருக்கு ரஷ்யா தயாராக உள்ளது': மேற்கத்திய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை ரஷ்யா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம் உலகம்

    இஸ்ரேல்

    லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்  லெபனான்
    இஸ்ரேல் எல்லையில் வாழும் தனது நாட்டு மக்களுக்கு இந்தியா அறிவுரை  இந்தியா
    காசா போருக்கு மத்தியில் ரம்ஜான் பண்டிகை வர இருப்பதால் ஜெருசலேமில் பதற்றம்  காசா
    போருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்  ஐநா சபை

    உலகம்

    ரஷ்ய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறை மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரல் ரஷ்யா
    'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு  அமெரிக்கா
    மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை  ரஷ்யா
    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025