NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா 
    அவரது பதவிக்காலம் 13 மாதங்கள் நீடித்து, அக்டோபர் 25, 2024 அன்று முடிவடையும்.

    பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் காசி ஃபேஸ் ஈஷா 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 17, 2023
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் 29வது தலைமை நீதிபதியாக நீதிபதி காசி ஃபேஸ் ஈஷா இன்று(செப் 17) பதவியேற்றார்.

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று இருக்கும் அவரது பதவிக்காலம் 13 மாதங்கள் நீடித்து, அக்டோபர் 25, 2024 அன்று முடிவடையும்.

    63 வயதான நீதிபதி ஈஷா, இஸ்லாமாபாத்தில் உள்ள அய்வான்-இ-சத்ரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பதவியேற்று கொண்டார்.

    இடைக்கால பிரதமர் அன்வாருல் ஹக் கக்கர், ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அமைச்சர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    நீதிபதி ஈசா நியமனம் குறித்த அறிவிப்பு வாசிக்கப்பட்டபோது அவரது மனைவி சரீனா ஈஷா அவருக்கு அருகில் இருந்தார்.

    டியூ

    இம்ரான் கானுக்கும் புதிய தலைமை நீதிபதிக்கும் முன்விரோதம் உள்ளதா?

    பொதுவாக, ஒருவர் பதவியேற்கும் போது, அவரது நெருங்கிய உறவினர்கள் கூட்டத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒருவர் பதவி பிரமாணம் செய்யும் போது அவரது குடும்ப உறுப்பினர் அவர் அருகில் நிற்பது மிக அரிதான விஷயமாகும்.

    நீதிபதி ஈசா மற்றும் அவரது மனைவி சரீனாவின் மீது 2019இல் வரி வழக்கு ஒன்று போடப்பட்டது. அப்போது, சரீனாவை குறித்து மிக பரபரப்பாக பேசப்பட்டது.

    அந்த சமயத்தில் அவர் நீதிமன்றத்திற்கு வந்தபோது, ஒரு ஊன்று கோலுடன் வந்தது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.

    பின்னர், அவர்கள் இருவரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பின்னடைவுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    அப்போதைய அரசாங்கத்திற்கு சாதகமாக இந்த நீதிபதி இல்லை என்பதால் அவரை இம்ரான் கான் அரசு குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025
    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்

    பாகிஸ்தான்

    தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா? இந்தியா
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? ஷெபாஸ் ஷெரீப்
    காதலரை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற திருமணமான இந்திய பெண்  இந்தியா
    பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு  பிரிட்டன்

    உலகம்

    அருணாச்சல பிரதேசத்தில் உரிமை கொண்டாடும் சீனா: புதிய மேப் வெளியிடபட்டதால் சர்ச்சை  சீனா
    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது  பாகிஸ்தான்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் இந்தியா
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025