NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி
    2019 இல் இத்தாலி அதிகாரப்பூர்வமாக சீனாவின் BRI ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    ஜி20 மாநாடு: சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' திட்டத்தில் இருந்து வெளியேறுகிறது இத்தாலி

    எழுதியவர் Sindhuja SM
    Sep 10, 2023
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் 'பெல்ட் அண்ட் ரோடு' முன்முயற்சியில்(BRI) இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி சீனப் பிரீமியர் லி கியாங்கிடம் தெரிவித்துள்ளார்.

    ஜி20 மாநாட்டின் போது நடந்த இத்தாலி-சீனா இரு தரப்பு பேச்சு வார்த்தையின் போது அவர் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜி20 மாநாட்டிற்காக டெல்லி வந்திருந்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று சீனப் பிரீமியர் லி கியாங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.

    இந்த பேச்சு வார்த்தையின் போது, சீனாவின் புகழ்பெற்ற பல பில்லியன் டாலர் முன்முயற்சியான 'பெல்ட் அண்ட் ரோடு' குறித்து பிரீமியர் லி கியாங்கிடம் பேசிய அவர், BRIஐ விட்டு வெளியேறுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.

    டிவ்க்ஜ்ன்

    சீனாவுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்பும்  இத்தாலி 

    இந்த முன்முயற்சியினால் இத்தாலிக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த முன்முயற்சியில் இருந்து இத்தாலி விலகினாலும் சீனாவுடன் இத்தாலி நல்ல நட்புறவைப் பேண விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    2019 இல் இத்தாலி அதிகாரப்பூர்வமாக சீனாவின் BRI ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    'பெல்ட் அண்ட் ரோடு' முன்முயற்சி என்பது உலகத்தை சீனாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் வழித்தடங்களை அமைக்கும் திட்டமாகும்.

    இதனால், உலகத்துடனான சீனாவின் வர்த்தகம் அதிகரிக்கும் என்று சீனா கருதுகிறது.

    இதே போன்று இந்தியாவை உலக நாடுகளுடன் இணைக்கும் வழித்தடத்திற்கான திட்டத்தை நேற்று ஜி20 மாநாட்டின் போது பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    இத்தாலி
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    சீனா

    கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன கூகுள்
    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம் கொலை
    சீனாவின் வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    'இது போங்காட்டம்' : புடாபெஸ்ட் ஓபன் போட்டியில் சீன வீராங்கனைக்கு நேர்ந்த சோகம் டென்னிஸ்

    இத்தாலி

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலகம்
    காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் உலகம்
    இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி உலகம்

    உலகம்

    மீண்டும் பாகிஸ்தானில் பெரும் வெடிகுண்டு தாக்குதல்: 11 தொழிலாளர்கள் பலி  பாகிஸ்தான்
    "மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்": அதிபர் தேர்தல் விவாதங்களைத் தவிர்க்கும் டிரம்ப் அமெரிக்கா
    2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்தியாவுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகப்பெரும் எச்சரிக்கை  அமெரிக்கா
    புயல் ஹிலாரி பாதிப்புக்கு மத்தியில் கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் அமெரிக்கா

    உலக செய்திகள்

    'ஈராக்கில் விற்கப்படும் இந்திய இருமல் மருந்துகள் பாதுகாப்பற்றது': WHO எச்சரிக்கை  உலக சுகாதார நிறுவனம்
    ஆப்கானிஸ்தானில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த தலிபான்கள் மும்முரம்  ஆப்கானிஸ்தான்
    ஹவாய் தீவை வாரிச்சுருட்டிய காட்டுத்தீ; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு அமெரிக்கா
    ஹவாய் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025