NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல்
    துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உரையாற்றும் துருக்கி அதிபர் எர்டோகன். இப்போராட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது இஸ்ரேல்

    எழுதியவர் Srinath r
    Oct 29, 2023
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் கண்டித்ததற்கு எதிர்வினையாக, துருக்கியில் இருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன்,

    "துருக்கியில் இருந்து வெளிவரும் கடுமையான அறிக்கையை கருத்தில் கொண்டு, இஸ்ரேல்- துருக்கி உறவுகளை மறுமதிப்பீடு செய்ய, நான் தூதர்களை வெளியேற உத்தரவிடுகிறேன்" என பதிவிட்டு இருந்தார்.

    இவ்விருநாடுகளும் கடந்த வருடம் தான் தூதர்களை நியமித்துக் கொண்டனர்.

    மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் முறிந்து போன இருநாட்டு உறவுகளை மீட்டு எடுக்கும் முயற்சிக்கு, இஸ்ரேலின் இந்த அறிவிப்பு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தூதர்களை வெளியேற உத்தரவிட்ட எலி கோஹன்

    Given the grave statements coming from Turkey, I have ordered the return of diplomatic representatives there in order to conduct a reevaluation of the relations between Israel and Turkey.

    — אלי כהן | Eli Cohen (@elicoh1) October 28, 2023

    3rd card

    பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராடிய துருக்கி அதிபர்

    பாலஸ்தீனர்களின் நீண்ட கால ஆதரவாளரான அதிபர் எர்டோகன், நேற்று இஸ்தான்புலில் அவர் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த பாலஸ்தீன் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றார்.

    இதில் பேசியவர், "இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர்" என்றும், பாலஸ்தீனர்களை "ஒழிக்க" நினைக்கும், "போர் குற்றவாளி" எனவும் பேசினார்.

    மேலும் அவர். "ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னை தற்காத்துக்கொள்ள நிச்சயமாக உரிமை உண்டு"

    "ஆனால் இந்த விவகாரத்தில் நீதி எங்கே? நீதி இல்லை- காஸாவில் ஒரு கொடூரமான படுகொலை நடக்கிறது" என பேசினார்.

    மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய போது, நிதானம் காத்த எர்டோகன், இஸ்ரேல் பதில் தாக்குதலில் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    துருக்கி
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ட்விட்டர்

    சமீபத்திய

    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்

    துருக்கி

    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் வெளியுறவுத்துறை
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 16 ஆயிரத்தைத் தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    துருக்கி பூகம்ப சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் சிரியா
    துருக்கி நிலநடுக்கம் அப்டேட்ஸ்: ஆபரேஷன் தோஸ்த் என்றால் என்ன உலகம்

    இஸ்ரேல்

    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து அமெரிக்கா
    மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம் பிரதமர்
    காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல் ஜோ பைடன்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை அமெரிக்கா
    பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்? ஹமாஸ்
    பாலஸ்தீனத்தில் போர் நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்க கேபிடல் கில்லில் போராடியவர்கள் கைது அமெரிக்கா
    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்

    ட்விட்டர்

    பயனர்களுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் ப்ளூஸ்கை சமூக வலைத்தளம்
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? கல்வி
    Threads-ன் வெப் வெர்ஷனை விரைவில் வெளியிடவிருக்கும் மெட்டா சமூக வலைத்தளம்
    செய்திப் பகிர்வுகள் மற்றும் செய்திகள் தொடர்பான புதிய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கும் எக்ஸ் எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025