
தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் ஈரான்-இஸ்ரேல் தாக்குதல்; 230க்கும் மேற்பட்டோர் பலி
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ளது, இரு நாடுகளும் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டன.
இதன் விளைவாக 230 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பதற்றத்தைத் தணிக்க சர்வதேச அழைப்புகள் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் தொடர்ந்து பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
எண்ணெய் கிடங்குகள், அரசு கட்டிடங்கள் மற்றும் ராணுவத் தலைமை உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து தங்கள் நாட்டில் இஸ்ரேல் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் ஐஆர்ஜிசி உளவுத்துறைத் தலைவர் ஜெனரல் முகமது கசெமி மற்றும் இரண்டு மூத்த ஜெனரல்கள் அடங்குவர்.
ஈரானின் வெளியுறவு அமைச்சக கட்டிடம் மற்றும் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு ஆகியவையும் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஈரான்
ஈரான் சுகாதார அமைச்சகம் தகவல்
ஈரானின் சுகாதார அமைச்சகம் 224 இறப்புகளையும் 1,277 காயங்களையும் உறுதிப்படுத்தியது.
அதே நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற சுயாதீன வட்டாரங்கள் 400 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறின. பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்புகளில் 90 சதவீதம் பேர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள மெட்ரோ நிலையங்கள் மற்றும் மசூதிகள் பொதுமக்கள் பதுங்குவதற்கான முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும் தாக்குதலால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை ஈரான் அரசு மறுத்த போதிலும், எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீங்க கியூவில் உள்ளனர்.
பதிலடி
ஈரானின் பதிலடி தாக்குதல்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தரப்பில் இருந்து 270க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அவற்றில் 22 நாட்டின் வான் பாதுகாப்புகளை உடைத்துவிட்டன.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட பதினான்கு இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர், கிட்டத்தட்ட 400 பேர் காயமடைந்துள்ளனர்.
பேட் யாம், தம்ரா மற்றும் ரெஹோவோட் போன்ற நகரங்கள் கொடிய தாக்குதல்களைச் சந்தித்தன, குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியால் ஓமனில் அமெரிக்காவுடன் திட்டமிடப்பட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகளை ஈரான் ரத்து செய்தது.
அதிகரித்து வரும் பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவற்றுடன், மத்திய கிழக்கு பகுதி பரந்த பிராந்திய ஸ்திரமின்மைக்கான ஆபத்தில் உள்ளது.