Page Loader
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு
ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஈரான் ராணுவ விமான தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அழிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 23, 2025
02:39 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேல் ராணுவம், ஆறு ஈரானிய ராணுவ விமான நிலையங்கள் மீது தொடர்ச்சியான இலக்குவைக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு, 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்ததாக அறிவித்துள்ளது. மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரான் முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஈரானின் வான்வழித் திறன்களை பலவீனப்படுத்துவதையும், இஸ்ரேலின் மீதான எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், அழிக்கப்பட்ட விமானங்களில் ஈரானிய எப்-14கள், எப்-5கள் மற்றும் ஏஎச்-1 ஹெலிகாப்டர்கள் அடங்கும் என்று தெரிவித்துள்ளது. அவை இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக நிலைநிறுத்தப்பட்டதாக மேலும் கூறியுள்ளது. இந்த ராணுவத் தளங்களில் உள்ள முக்கிய ஓடுபாதைகள் மற்றும் நிலத்தடி உள்கட்டமைப்பையும் வான்வழித் தாக்குதல்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

உளவுத்துறை

இலக்குகளை குறிவைக்க உதவிய உளவுத்துறை 

இஸ்ரேல் ராணுவத்தின் கூற்றுப்படி, அதன் ராணுவ புலனாய்வு சேவையின் உளவுத்துறை இந்த நடவடிக்கையை எளிதாக்கியது, குறிப்பாக கெர்மன்ஷாவில், இஸ்ரேலை குறிவைத்து தரையிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகளுக்கான ஏவுதளம் மற்றும் சேமிப்பு தளங்கள் அழிக்கப்பட்டன. "வான்வழி மேன்மையை அடைவதற்கும் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஈரானிய ஆட்சியின் ராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து தீவிரப்படுத்துகிறது." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதல்களின் போது, ​​டெல் அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவ பயன்படுத்தப்பட்ட இலக்குகளும் இதில் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.