NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள் 
    இஸ்ரேல் தாக்குதல் கண்டனத்துக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது: ஈரான் அதிபர்

    இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா முன்வர வேண்டும்: ஈரான் வேண்டுகோள் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 07, 2023
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இது குறித்து ஈரான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், மேற்கத்திய காலனித்துவத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டங்களையும், ஒத்துழையாமை இயக்கத்தை நிறுவிய இந்தியாவின் நிலைப்பாட்டையும் ரைசி நினைவு கூர்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

    "காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சியோனிச குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜபிக்வெ

    இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் 

    உடனடியாக போரை நிறுத்துதல், காசாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் போன்ற உலகளாவிய கூட்டு முயற்சிகளை ஈரான் ஆதரிக்கிறது என்றும் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி கூறியுள்ளார்.

    "பாலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான கொலைகள் உலகின் அனைத்து சுதந்திர நாடுகளையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த கொலையானது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அதிபர் ரைசி தெரிவித்துள்ளார்.

    ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது, மருத்துவமனைகள், பள்ளிகள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை எந்தவொரு மனிதனின் பார்வையில் இருந்தும் "கண்டனத்துக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் மேலும் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இந்தியா
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் உலகம்

    இந்தியா

    நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்! நிதித்துறை
    வேவு பார்க்கப்படும் அரசியல்வாதிகளின் ஐபோன்கள்.. ஆபத்பாந்தவனாக உதவும் ஐபோனின் 'லாக்டவுன் மோடு' ஆப்பிள்
    இந்தியர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்கு செல்லலாம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய நடவடிக்கை தாய்லாந்து
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    நரேந்திர மோடி

    "பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி பிரதமர் மோடி
    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    போர் விமானங்களைத் தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தது இந்தியா  அமெரிக்கா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் இந்தியா
    காவி நிற 'வந்தே பாரத்' ரயில் - மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம் வந்தே பாரத்
    ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழா-காணொளியில் மோடி உரை  பிறந்தநாள்
    இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை பிரதமர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025