இங்கிலாந்தில் 'இஸ்லாமோஃபோப்' என துன்புறுத்தப்படுவதாக இந்திய மாணவர் குற்றச்சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின்(LSE) இந்திய மாணவரான சத்யம் சுரானா, இந்த ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் குறிவைக்கப்பட்டு 'பாசிஸ்ட்' என்று அழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மீது காலிஸ்தானி பிரிவினர் நடத்திய தாக்குதலின்போது, தரையில் கிடந்த ஒரு மூவர்ணக் கொடியை உயர்த்தி பிடித்தபோது செய்திதாள்களில் இடம்பெற்றார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய சத்யம், கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனக்கு எதிராக ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், தனது எதிர்ப்பாளர்கள் தன்னை பாஜகவுடன் தொடர்புபடுத்தியதாகவும், அவரை தேர்தலில் புறக்கணிக்க 'பாசிஸ்ட்' என்று முத்திரை குத்தியதாகவும் கூறியுள்ளார்.
லண்டன் மாணவர் தேர்தலிலும் பாஜக?
LSEல் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் தொடக்கத்தில் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதாகவும், அதில் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் கூறினார் சத்யம். மார்ச் 14 முதல் 16ம் தேதி, சத்தியத்தின் போஸ்டர்கள் குறிவைக்கப்பட்டு சிதைக்கப்பட்டது. "17ஆம் தேதி, எல்எஸ்இயின் அனைத்து குழுக்களிலும்,'இந்த சத்யம் சூரானா ஒரு பிஜேபி ஆதரவாளர். அவர் ஒரு பாசிச நபர், இஸ்லாமோபோப், டிரான்ஸ்போப்' என்று செய்திகள் வந்தன. இந்தச் செய்திகள் இந்திய அரசாங்கத்திற்கும், தற்போதைய ஸ்தாபனத்திற்கும் எதிராகவும் மற்றும் சர்ச்சைக்குரியதாகவும் இருந்தன" என்று அவர் கூறினார். பிரிவினைவாதிகள், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுடனான சத்தியத்தின் புகைப்படம் (இந்தியா பயணத்தின் போது ஃபட்னாவிஸ் அழைத்தபோது கிளிக் செய்யப்பட்டது)குறிப்பிட்டு, அவரை பாஜகவுடன் தொடர்புபடுத்த பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.