NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்
    இந்த போரில் இதுவரை 3,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டார்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 14, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் உயர்மட்டத் தளபதி ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF) தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 7ஆம் தேதி, நூற்றுக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,300க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றனர்.

    இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அந்த மாபெரும் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ்-நுக்பா படையின் நிறுவனத் தளபதி அலி காடி இன்று கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "கடந்த வார இறுதியில் காசா பகுதிக்கு அருகே இஸ்ரேலியர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஹமாஸ் 'நுக்பா' கமாண்டோ படையின் நிறுவனத் தளபதி அலி காடி கொல்லப்பட்டார்." என்று இஸ்ரேலிய விமானப்படை(IAF) ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    தக்ஜவாஸ்

    "அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளும் இதே கதிதான்": இஸ்ரேல் 

    "2005 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடிமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அலி கைது செய்யப்பட்டார். அதன் பின், கிலாட் ஷாலிட் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அவர் விடுவிக்கப்பட்டார்" என்று IAF மேலும் கூறியுள்ளது.

    இந்த செய்தியை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை(IDF), "அலி காடி இஸ்ரேலில் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான அக்டோபர் 7 படுகொலைக்கு தலைமை தாங்கினார். நாங்கள் அவரை அழித்துவிட்டோம். அனைத்து ஹமாஸ் பயங்கரவாதிகளும் இதே கதிதான்." என்று ட்விட்டரில் கூறியுள்ளது.

    அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் வெடித்தது.

    இந்த போரில் இதுவரை 3,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாலஸ்தீனம்
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இஸ்ரேல்

    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  பாலஸ்தீனம்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்
    பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? ஈரான்

    பாலஸ்தீனம்

    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  கேரளா
    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி இந்தியா
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்

    உலகம்

    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    அமெரிக்கா பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க் அமெரிக்கா
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  இஸ்ரேல்
    ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: பீதியில் மக்கள்  ஆப்கானிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025