NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
    ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    ரகசிய ஆவணங்கள் கசிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 23, 2023
    01:01 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(பி.டி.ஐ) கட்சி தலைவர் இம்ரான் கான் மற்றும் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் நாட்டின் ரகசிய சட்டங்களை மீறியதாக பாகிஸ்தானில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

    இம்ரான் கான் மற்றும் குரேஷி இருவரும் இந்த குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

    மார்ச்-2022இல் ஒரு பொது பேரணியின் போது, ​இம்ரான் கான் ஒரு துண்டு காகிதத்தை காட்டி, அமெரிக்கா தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    அவர் அப்போது வைத்திருந்த ஆவணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

    தனது எதிரிகளை விமர்சிக்க முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயன்படுத்திய அந்த ரகசிய ஆவணம் காணாமல் போனதை அடுத்து, ரகசிய சட்டங்களை மீறியதாக அவர் மீது தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    பிஜ்வ்ழ்ந்

    அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923ன் கீழ் வழக்குப் பதிவு

    அந்த ஆவணம் காணாமல் போனதை அடுத்து, இம்ரான் கான் மீதும் அவரது நெருங்கிய உதவியாளர் ஷா மஹ்மூத் குரேஷி மீதும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் 1923ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அதன் பின், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திடம் இருந்த இந்த வழக்கு அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கின் கடைசி விசாரணை அக்டோபர் 17ஆம் தேதி ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் நடந்தபோது, ​​குற்றப்பத்திரிகையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு நீதிபதி அபுவல் ஹசனத் சுல்கர்னைன் ஒத்திவைத்திருந்தார்.

    இந்நிலையில், அந்த சிறப்பு நீதிமன்றம், இன்று இம்ரான் கான் மற்றும் குரேஷி ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பாகிஸ்தான்

    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது  இம்ரான் கான்
    நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் நீரஜ் சோப்ரா
    'சூப்பர் 4'க்கு முன்னேறியிருக்கும் ஆசிய கோப்பைத் தொடர், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை BANvsPAK : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு ஆசிய கோப்பை

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    உலகம்

    இந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரானின் திட்டமிட்ட சதியா? ஈரான்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஈரானின் உச்ச தலைவர் இஸ்ரேல்
    பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை? இஸ்ரேல்

    உலக செய்திகள்

    வீடியோ: சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்தைக் பிணைய கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,445ஆக உயர்வு  ஆப்கானிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025