NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு 
    மீட்கப்பட்ட 278 பேரில் குழந்தைகளும் அடங்குவர்.

    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு, அந்நாட்டில் இருந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் வெளியேறியது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    INS சுமேதா கப்பலில் உள்ள இந்தியர்களின் புகைப்படங்களை வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.

    "ஆபரேஷன் காவேரியின் கீழ், சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு அந்நாட்டில் இருந்து வெளியேறியது. INS சுமேதா கப்பல், 278 பேருடன் போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவுக்கு புறப்பட்டது." என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மீட்கப்பட்ட 278 பேரில் குழந்தைகளும் அடங்குவர்.

    சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களால் இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர்.

    details

    இந்தியர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: மோடி

    ஆபரேஷன் காவேரியின் ஒரு பகுதியாக இந்தியா இரண்டு போக்குவரத்து விமானங்களை ஜெட்டாவிலும், INS சுமேதா கப்பலை போர்ட் சூடானிலும் மீட்பு பணிக்காக நிறுத்தி வைத்திருக்கிறது.

    INS சுமேதா கப்பல் ஜெட்டாவை அடைந்ததும், அங்கிருந்து போக்குவரத்து விமானங்கள் மூலம் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் வீட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்.

    கிட்டத்தட்ட 3000 இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    சூடான் தலைநகர் கார்ட்டூமின் பல்வேறு பகுதிகளில் கடுமையான சண்டை நடப்பதாகக் கூறப்படுவதால், அந்நாட்டில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து மோசமாக இருக்கிறது.

    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சூடான்
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சூடான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா

    இந்தியா

    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    காவிரி குடிநீர் குழாய் பாதிப்பு - 35 கிராமங்கள் குடிநீர் இன்றி தவிப்பு! திருப்பூர்
    உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா இந்திய அணி
    ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்! உலகம்

    உலகம்

    'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்  இந்தியா
    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை  சீனா
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025