NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை! 
    அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், இராணுவத் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்

    'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை! 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    07:57 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனரும், தற்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தனது மனைவி புஷ்ரா பீபி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தான் நேரடியாகக் காரணம் என்று புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

    புஷ்ரா பீபி, ஊழல் வழக்கிலும், 71 வயதான இம்ரான் கானுடன் சட்டவிரோதமாக திருமணம் செய்த வழக்கிலும் தண்டிக்கப்பட்டு, தற்போது இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள பானி காலா இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதுபற்றி, இம்ரான் கானின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு நீண்ட இடுகையின்படி, தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் பத்திரிக்கையாளர்களுடனான உரையாடலில் இராணுவத் தலைவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என பதிவிடப்பட்டுள்ளது.

    குற்றசாட்டு 

    ராணுவ தளபதி மீது குற்றசாட்டு வைக்கும் இம்ரான் கான்

    "ஜெனரல் அசிம் முனீர் என் மனைவிக்கு வழங்கப்பட்ட தண்டனையில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்," என்று கான் கூறினார்.

    "அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறினார்".

    "என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால், நான் அசிம் முனீரை விடமாட்டேன், நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன். அவரது அரசியல் சட்டத்துக்கு விரோதமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவேன்" என்று மிரட்டல் விடுத்தார் இம்ரான் கான்.

    நாட்டில் காட்டின் சட்டம் இருப்பதாகவும், அவற்றை 'காட்டின் ராஜா' செயல்படுத்துவதாகவும் இம்ரான்கான் கூறினார்.

    "காட்டின் ராஜா விரும்பினால், நவாஸ் ஷெரீப்பின் அனைத்து வழக்குகளும் மன்னிக்கப்படுகின்றன. அவர் விரும்பினால், ஐந்து நாட்களில் மூன்று வழக்குகளில் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம்," என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இம்ரான் கான்
    பாகிஸ்தான்
    பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தான் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி ஐநா சபை
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  ஈரான்
    பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான் ஈரான்
    ஈரானின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதல்கள் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் ராணுவம்

    பாகிஸ்தான் ராணுவம்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன? ஈரான்

    பாகிஸ்தான் நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது பாகிஸ்தான்
    தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை இம்ரான் கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025