NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ

    எழுதியவர் Srinath r
    Dec 21, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதியான நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் குற்றம் சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்திருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்க-கனடா குடியுரிமை பெற்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை, அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் கொலை செய்ய முயன்றதாக அந்நாடு குற்றம் சாட்டியிருந்தது.

    இந்நிலையில், அண்மையில் நடந்த நேர்காணலில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து, ஜஸ்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.

    2nd card

    "அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது"

    கனடியன் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் இடம் பேசிய ட்ரூடோ, " இந்த விவகாரத்தில் அவர்கள்(இந்தியாவை குறிப்பிட்டு) குழப்ப முடியாது என்பதை உணரத் தொடங்கி விட்டனர்" என்ற அவர்,

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர், "இந்த விவகாரத்தில் முன்பிருந்ததை விட தற்போது வெளிப்படத் தன்மை அதிகரித்துள்ளது" என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசியவர், "கனடாவை தாக்குவதால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட முடியாது என புரிதல் ஏற்பட்டுள்ளது" என கூறினார்.

    முன்னதாக, நியூயார்க்கில் பன்னுனைக் கொல்ல ஒரு கொலையாளியை பணியமர்த்த நிகில் குப்தா என்பவருக்கு, இந்திய அதிகாரிகள் $100,000 வழங்கியதாக அமெரிக்க குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

    கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையை இந்தியா தீவிரமாக எடுத்து, அது குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளது.

    3rdcard

    "இந்தியாவுடன் சண்டை இட விரும்பவில்லை"

    மேலும் பேசிய ட்ரூடோ, சீனாவின் ஆதிக்கம் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளதால், கனடா, இந்தியாவுடன் சண்டை இட விரும்பவில்லை என தெரிவித்தார்.

    "இது தொடர்பாக இந்தியாவுடன் இப்போது சண்டையிடும் சூழ்நிலையில் நாங்கள் இருக்க விரும்பவில்லை. வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாங்கள் பேச விரும்புகிறோம். இந்தோ-பசிபிக் திட்டத்தை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம்," என்றார்.

    பினான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு இந்திய பிரதமர் மோடி அளித்த பேட்டியில், இந்தியா சட்டத்திற்கு கட்டுப்படுவதாகவும், ஒரு சில சம்பவங்கள் இந்தியா-அமெரிக்க உறவுகளை சீர்குலைக்காது என்றும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜஸ்டின் ட்ரூடோ
    பிரதமர் மோடி
    பிரதமர்
    மோடி

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  கனடா
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா

    பிரதமர் மோடி

    டெல்லி கர்தவ்யா பாதையில் நினைவு பூங்காவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்  டெல்லி
    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை  தமிழிசை சௌந்தரராஜன்
    கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ்
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி

    பிரதமர்

    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
     காசாவில் கடும் போருக்கு மத்தியில் திறக்கப்பட்ட புதிய பள்ளி இஸ்ரேல்
    ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆதரிக்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது திரிணாமுல் காங்கிரஸ்

    மோடி

    ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி சர்வதேச யோகா தினம்
    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    அதிபர் ஜோ பைடனுடன் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025