NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
    கனடா பிரதமர் ட்ரூடோ மற்றும் பிரிட்டன் பிரதமர் சுனக் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில் இந்தியா கனடா விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்

    எழுதியவர் Srinath r
    Oct 07, 2023
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.

    காலிஸ்தான் தலைவர் நிஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர் இருப்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக கனடா பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது இருநாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் நேற்று கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் நடத்திய தொலைபேசி உரையாடலில் இந்தியா குறித்த விஷயங்களே அதிகமாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து டவுனின் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் தொடர்பான நிலைமை குறித்து பிரதமர் ட்ரூடோ எடுத்துரைத்தார்" எனக் கூறப்பட்டு இருந்தது.

    2nd card

    இந்தியா- கனடா விவகாரத்தில் பிரிட்டனின் பார்வையை தெளிவுபடுத்திய சுனக்

    மேலும் அந்த அறிக்கையில் இந்தியா கனடா விவகாரம் குறித்த பிரிட்டனின் பார்வை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

    "பிரதமர்(சுனக்) அனைத்து நாடுகளும் இறையாண்மையையும், சட்டத்தின் படியும், ராஜ்ய உறவுகள் மீதான வியன்னா மாநாட்டின் கொள்கைகள் உட்பட அனைத்தையும் மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார்"

    "அவர்(சுனக்) இந்த பதற்றம் தனிய வேண்டும் என விரும்புகிறார். இந்த விவகாரத்தில் அடுத்த அடிகளை எடுத்து வைக்க அதிபர் ட்ரூடோ உடன் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டார்" என அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நிஜார் கொலைக்கு ட்ரூடோ, இந்தியா மீது குற்றம் சாட்டிய பின், இரு நாடுகளும் அவரவர் நாட்டில் உள்ள அடுத்த நாட்டின் தூதர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    பிரிட்டன்
    ஜஸ்டின் ட்ரூடோ
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கனடா

    இந்தியா-கனடா: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஏன் மோசமடைந்தன? இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை வெளியேற்றியது கனடா  இந்தியா
    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா இந்தியா

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    ஜஸ்டின் ட்ரூடோ

    18 வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அறிவிப்பு  கனடா
    விமானத்தில் கோளாறு: இந்தியாவில் சிக்கி கொண்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    கனடாவிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கி தவிக்கும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா
    36 மணி நேரமாக இந்தியாவில் சிக்கி தவித்த கனேடிய பிரதமர் கனடாவுக்கு புறப்பட்டார்  இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து இந்தியா
    பிரிட்டன் உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை நிறுத்தப்படவில்லை: இந்திய அதிகாரிகள் பதில் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025