NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
    உலகம்

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023, 05:15 pm 1 நிமிட வாசிப்பு
    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
    சில பாலூட்டிகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

    பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலத்தில் 6 பறவைகளுக்கும், ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் ஒரு பறவைக்கும் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 180 நாட்களுக்கு நாடு முழுவதும் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. H5N1 வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் உலகின் மிகப்பெரிய கோழி இறைச்சி ஏற்றுமதியாளராக உள்ளது. ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட $10 பில்லியன் மதிப்பிலான கோழி இறைச்சிகள் பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    H5N1 வைரஸ் பரவலை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்: WHO

    அக்டோபர் 2021 முதல் பறவை காய்ச்சல் அதிகம் பரவி வந்தாலும், தற்போது ஏற்பட்டிருக்கும் பரவலால் முன்பை விட அதிகமான காட்டுப் பறவைகள் உயிரிழந்துள்ளன. சில பாலூட்டிகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, H5N1 வைரஸ் மேலும் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இது மனிதர்களிடையே பரவக்கூடிய வடிவமாக மாறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பறவைகளுடன் மக்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் விளைவாக இப்படிபட்ட பரவல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    உலக செய்திகள்

    உலகம்

    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலக செய்திகள்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹைதராபாத்
    ஜூன் மாதம் இந்தியா வருகிறார் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா
    பெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு  ஆஸ்திரேலியா

    உலக செய்திகள்

    இந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு இந்தியா
    அடுத்த தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்: WHO தலைவர் உலகம்
    ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்  உலகம்
    பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்  இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023