NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்
    இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பரூக் இந்த விசாரணைக்கு தலைமை தாங்கினார்.

    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    May 12, 2023
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    தோஷகானா வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்(IHC) இன்று(மே 12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.

    அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.

    அதற்கு அடுத்த நாள், இம்ரான் கான் மீது தோஷகானா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது.

    இந்நிலையில், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்துக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமீர் பரூக் இந்த விசாரணைக்கு தலைமை தாங்கினார்.

    details

    தோஷகானா வழக்கு என்றால் என்ன?

    அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் நேற்று தான் விடுவிக்கப்பட்டார்.

    இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இம்ரான் கானை உடனே விடுவிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், தோஷகானா வழக்கை நிறுத்தி வைக்குமாறு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

    விலையுயர்ந்த கிராஃப் கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுகளை, அரசு டெபாசிட்டரியில் இருந்து இம்ரான் கான் தள்ளுபடி விலையில் வாங்கியதாகவும், அவற்றை லாபத்திற்காக விற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவே தோஷகானா வழக்கு என்று அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையில், முன் ஜாமீன் கோரி இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதால், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பாகிஸ்தான்

    விக்கிபீடியாவுக்கு தடை: அவதூறான உள்ளடக்கங்களை நீக்க தவறியதாக குற்றசாட்டு உலகம்
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப் இந்தியா
    விக்கிபீடியா தடையை நீக்கிய பாகிஸ்தான் உலகம்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் சீனா

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    உலகம்

    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    இணையப் பாதுகாப்பில் இந்தியாவைப் பின்பற்றிய ஐரோப்பிய ஒன்றியம்.. மத்திய அமைச்சர் கருத்து!  சமூக வலைத்தளம்
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   சிங்கப்பூர்
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா

    உலக செய்திகள்

    320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன?  கூகுள்
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி பாகிஸ்தான்
    முன்னாள் சிஇஓ-வை ஏன் பணிநீக்கம் செய்தது காக்னிசன்ட் நிறுவனம்?  அமெரிக்கா
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025